டாக்டர். மா. இராசமாணிக்கனார்
175
இரண்டாம் பராந்தகன் காஞ்சிபுரத்தில் தனக்கென்று இருந்த அரண்மனையில் இறந்தான்; அதனால் ‘பொன்மாளிகைத் துஞ்சிய தேவர்’ எனப்பட்டான்.[1] இதனால், இவன் காலத்தில் முழுத் தொண்டை நாடும் சோழர் ஆட்சிக்கும் மீண்டும் உட்பட்டுவிட்டது என்பது விளங்குகிறதன்றோ?
இரண்டாம் பராந்தகன் மனைவியருள் குறிப்பிடத் தக்கவர் இருவர். இவரே தம் கணவனுடன் உடன் கட்டை ஏறினர்.[2] இவர் இறந்தபொழுது இராசராசன் குழந்தையாக இருந்தான் என்று திருக்கோவலூரில் உள்ள முதல் இராராசன் கல்வெட்டு உணர்த்துகிறது. மற்றவர் சேரன் மாதேவியார்.[குறிப்பு 1] வானவன் மாதேவியார்க்கு ஆதித்த கரிகாலன், இராசராசன், குந்தவ்வை என்னும் மக்கள் மூவர் இருந்தனர். இப்பேரரசன் காலத்திற்றான் வீரசோழியம் என்னும் இலக்கண நூல் புத்தமித்திரர் என்பவராற் செய்யப்பட்டது.[3] குந்தவ்வையார் பெற்றோர் படிமங்களைத் தஞ்சாவூர்ப் பெரிய கோவிலில் எழுந்தருளுவித்தார்.[4]
ஆதித்த கரிகாலன் (கி.பி. 956 - 969) . இவன் பட்டம் பெற்று ஆண்டிலன்; ஆயினும் தந்தைக்கு உதவியாக இருந்தனன்; தன் பெயரால் பல கல்வெட்டுகள் வெளிவரக் காரணமாக இருந்தான். இரண்டாம் பராந்தகன் உயிருடன் இருந்த பொழுதே இவன் கொலை செய்யப்பட்டான்.[5] இதற்குக் காரணம் என்ன? கண்டராதித்தன் மகனான உத்தம சோழன் (மதுராந்தகன்) தக்க வயதடையாததால்,
- ↑ S.I.I. Vol. 3, p.288.
- ↑ 236 of 1902.
- ↑ ‘Cholas’ Vol. 190. 4.
- ↑ S.I.I. Vol II, Part 1, pp.69-70.
- ↑ 577 of 1920.
- ↑ இவர் பெயரால் அமைந்த ஊரே இன்று ‘சேர்மாதேவி’ என வழங்குகிறது.