276
சோழர் வரலாறு
விஷ்ணுபக்தி உடையவள்[1]. ஆதித்தன் ஆண்ட குட்டியார்’ என்ற சோழகுல வல்லியார் ஒரு மனைவி[2]. இதுகாறும் கூறியவற்றால், இவனுக்கு (1) மதுராந்தகி (2) தியாகவல்லி (3) ஏழிசைவல்லபி (4) திரைலோக்கியமாதேவி (5) காடவன் மாதேவி (6) கம்ப மாதேவி (7) சோழகுலவல்லி என மனைவியர் எழுவர் இருந்தமை அறியக் கிடக்கிறது.
உடன் பிறந்தார் : இவனுக்குக் குந்தவ்வை, மதுராந்தகி என்ற உடன் பிறந்த பெண்மணிகள் இருவர் இருந்தனர் என்பது சிதம்பரம் கல்வெட்டுகளால் தெரிகிறது.[3]
மக்கள் : குலோத்துங்கற்கும் மதுராந்தகிக்கும் பிறந்த ஆண்மக்கள் எழுவர், பெண்மக்கள் இருவர். ஆடவருள் இராசராசன், வீர சோழன், சோழகங்கன், விக்கிரம சோழன் ஆகியவரே கல்வெட்டுகளில் இடம் பெற்றுள் ளனர். இவருள் மூத்தவன் சோழகங்கன்; அவற்கு இளையவன் இராசராசன், அவற்கு இளையவன் வீரசோழன்; நான்காம் மகன் விக்கிரம சோழன்[4]. இவருள் குலோத்துங்கன் உள்ளம் கவர்ந்த மகன் விக்கிரம சோழனே ஆவன். இவனே தந்தைக்குப் பின் அரசு கட்டில் ஏறியவன். குலோத்துங்கன் வீரசோழனையும் மிக்க அன்புடன் நேசித்து வந்தான்; அவனை இருமுறை வேங்கியை ஆளுமாறு அனுப்பினான்[5].
குலோத்துங்கன் பெண்மக்களில் மூவர் பெயர்களே கல்வெட்டுகளில் அறியக் கிடக்கின்றன. அவை இராசசுந்தரி, சூரியவல்லி, அம்மங்கை என்பன. இப் பெண்மணிகளுள் இராசசுந்தரி கலிங்க அரசனான இராசராசனை மணந்தவள். சூரியவல்லி இலங்கை