பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைநிலச் சாயல்எலாம் மறைந்தோ டிற்று, பசுமைநில வயல்வெளியே வழிமுன் தோன்றும். ஆர்வமுறு நாரைகளும் மாரிக் காலத்து ஆப்பிரிக்கா செலவேண்டா! இதுவே போதும்.

அன்பான பறவைகளே! துருக்கு மீனப் புல்வெளிகள் உம்மனைகள் இனிதா கட்டும். எம்வேட்டைக் காரரும்.இவ் வெல்லைக் குள் நீர் இருக்குமட்டும் துமுக்கிதனை எடுக்க மாட்டார்.

பண்டுமுதல் இருந்துவரும் உந்து ணர்வால் படுதொலைவு நீல்விசும்பைக் கிழித்துக் கொண்டே கண்டிடவே சியார்சியன் சமநி லத்தைக் கரைந்துகொண்டு பறந்ததுவே நாரைக் கூட்டம்.