பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறைந்தது ஒருநூற் றாண்டு ஆயினும்நீ வாழ்வாய் என்று நினைக்கிறாய். என்றன் சிரிப்பில் நின்று வியக்கிறாய்? துயரக் கண்ணிர் துளித்தல் இல்லையே? இவ்வுலகு இருந்துநான் விடைபெற எவ்வித விரைவும் என்னிடம் இல்லை. வென்றிட முடியா வேதனை இல்லை

அவமதித் தவர்க்குஎல்லாம் அளறுண்டு, ஏகுவர்.

நினைவிலா மகிழ்வினை நீக்கலா? இல்லை என்றும் இல்லை. யாமே நெஞ்சாங் குலையின் சுருங்கி விரியும் அறைபோன் றவர்கள்; இரண்டும் ஒன்றிலே. என்னையும் என்றன் மகிழ்வையும் எந்த இகழ்வும் வாய்ப்புக் கேடும் தொடர்பு அறுத்திடத் துளியும்முடி யாதே!

II 7