பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்இங்கு நிற்கின்றேன் மாட்சியுடன் பேரறிவு மண்டிய திண்ணியனாய், ஊட்டமிகு தடந்தோளின் ஆற்றல் உடையவனாய், ஒண்சுடர் ஞாயிற்றை என்செயற்கு உட்படுத்தி, மண்ணில் உயர்ந்தவன், மாண்புடைய மாந்தன்நான். கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் வழங்கிடுவேன் கதிர்முறுவல்; வையம் முழுமைக்கும்; நான் இங்கே நிற்கின்றேன் - ஏனெனில் நான்மாந்தன்! ஆன்ற பொதுவுடைமை யன்!

3 5