பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

ஜூபன் முல்தாகலியேவ் கசகிஸ்தான் (R. 1920)

குளம்போசை

குண்டாந்தடி வீச்சும்சுழல் கொடுஞ்சாட்டை யின்ஒச்சும் கொண்டேவரும் அடுவேட்டையர் குவிமண்டைக ளோடும், சண்டைக்கிடா தோல்கூரையுள் கொள்ளைப்பொருள்

(தன்னைக் கண்டுபகிர் விளைவால்எழும் கடுஞ்சச்சர வொலியில் பண்டைக்குல மரபோர்துயர் பழக்கத்தினில் வாழ்ந்தார். கொண்டல்இடி எனச்சாலையில் குளம்போசையைக்

(கேட்கின்......

வரலாறதன் தொடக்கம்முதல் எண்ணில்துயர் இடையும், இரக்கப்பரி வற்றுஇன்னலில் ஏசும்வசை தாங்கிப் பரவும்ஒளி காலைவரை வருத்தும்முது குடனே ஒருபோதினும் முறையீடின்றிப் பரிமாந்தரைச் சுமக்கும் நிரலேவழி யினிலேகுளம் போசைதனைக் கேட்கின் விரவும்வியப் பொலியால்மன விளிம்பும்அதிர்ந் திடுமே.

சூயென்சியின் தொலைநல்சம வெளியில்எதிர் ஒலிக்கப் பாய்தீஎன அக்தோபரின் வாழ்த்தோங்கிய நாளில் மேல்ஓங்கியே மிளிர்செங்கொடி குதிரைமுது கமர்ந்தே, தீஓங்கியே தணியாச்செழும் தீரர்குல மக்கள் வாய்ஓங்கிய முழக்கம்எனில் சூறாவளி காட்டும் மாயாப்பெரும் குளம்போசைகள் மலிபுல்வெளி கேட்கும்.

136