பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

அக்ஜெமால் அமரோவா துருக்மேனியா

(19. 1928)

அமுதாரியா ஆற்றில்

ஒன்றபின் ஒன்றாய் எழுந்திடும் அலையால் அழைக்கும் ஊற்றாறு, செந்நெறி பிடித்த பசும்பட் டுடையாள் சிந்தை கவர்ந்திடுவாள்.

கானல் நீரே ஓடிய பாலையில் கலிக்கும் செழும்புனலில், ஊனுயிர் காக்கும் ஒப்பில் நீரினில் உலவும் படகார்ந்தே.

குதிரைகள், மக்கள், கொழிபால் குடங்கள் கொள்வாய் படகோட்டி, கதிரொளி கருக்கிய பண்ணைப் பெண்களைக் கூத்திற்கு அழைத்தேகு.

வீசும் காற்று படகை அசைத்துஉன் விருந்தாய் விளங்கட்டும் ஏகும் வணிகர் குழுப்போல் குதிரைகள் மக்கள் இறங்கட்டும்.

148