பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணக்கெடுக் கின்றீர், கணக்கெடுக் கின்றீர் நிற்கா மல்நீர் கணக்கெடுக் கின்றீர்......

இன்இளங் குழந்தைகள் மென்மயிர்த் தலையைப் பிஞ்சு விரல்கள் கொஞ்சும் போதும், காதற் கினிய மாதரின் மெல்லிடை தழுவி மகிழ்ந்து குழைவுறும் போதும், பாட்டி மார்களின் மெலிந்த தோட்புறம் அணைத்திடும் போதும் நம் அங்கையின் வழியாய்ப் பாய்ந்திடும் மின்சாரம் எவ்வளவு என்றும், பதிலுக்கு நம்மீது பாயும் மின்சாரம் கூடவா, குறைவா எவ்வளவு என்றும் கணக்கெ டுத்துக் காட்டுங்கள் பார்க்கலாம்.

இடைவி டாமலும் தொடர்ந்தும் கணிக்கிறீர்.........

ஆயினும் இதனை அறிந்ததுண் டாநாம்? மாந்தன் சிரிப்பதேன்? மண்ணுல கத்து வாழும் உயிர்களுள் மாந்தன் மட்டுமே சிரிப்பவன், இது ஏன்? இன்னும்ஒர் வேலையை இடுகிறேன்; செய்க. உலகச் சிரிப்பெலாம் மொத்தமாய்க் கூட்டுக; அவற்றின் ஆழம் அழுத்தங்கட் கேற்பப் பிரித்துத் தனித்தனிப் பெயர்கொடுத் திடுக. கெக்கலி நகைக்கும் எக்களிப் புக்கும் வேறு பாட்டினை விளக்கிக் கூறுக.

இடைவி டாமலும் தொடர்ந்து கணிக்கிறீர்......

இன்னும் ஒன்று கணக்கிட வேண்டுவேன்; நாம்ஒவ் வொருவரும் ஓங்கும்.இவ் வாழ்வில் பொதுப்பட எத்தனை மகளிரைக் கொதிப்புறும் காமக் கிளர்வுடன் கண்டுவெறித் திருப்போம்; உடன்பிறப்பு அன்பொடும் ஊன்றிப்பார்த் திருப்போம்: இவற்றை எல்லாம் எண்ணிக் கணிக்க!

1 74