பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்ணிரை உள்ளங் கையால்

தாங்கியே எடுக்கும் காலை

விண்ணகம் தலைகீ ழாக

விரிந்திடக் காண்பீர் நீரே.

இக்கரை இருந்து நீங்கள்

அக்கரை ஏகு தற்குத்

தக்கஒர் துடுப்பும் ஆகும்

தப்பிலாது உதவும் என்றும்.

நெடியபோர்ப் படையில் முன்னாள்

நின்அகங் கைது னிந்தே

கொடியினை உறுதி யாகக்

கொண்டதை நினைந்து பாராய்.

மடியினில் மழலைச் செல்வம்

மகிழ்வுடன் நெளியும் போதில்

மிடைந்திடும் உன்அ கங்கை

மெல்லென வருடும் அன்றே.

போக்கிரி ஒருவன் வீணாய்ப்

புகுந்துநம் சினத்தை மூட்டின்

தாக்கிடும் அவன்கன் னத்தைத்

தண்டனை அளிக்கும் கையே.

உலகினைச் சுற்றிப் பற்றி

உவகையில் மகிழ்வ தைப்போல்

நலந்திகழ் ஆப்பிள் தன்னை

நயமுடன் பிடித்து ருட்டும்.

மாசுறா வண்ணம் தூய்மை

மணக்கட்டும் அவ்வுள் ளங்கை, பேசிடும் நேர்மை ஒன்றே

பெற்றியை உணர்த்தி டட்டும்.

177

12