இங்கிவ் உலகினில் இயங்கும் ஞாயிறு
மறைந்த தென்னும் வேளையில்
பொங்கு பொதுமை வாணர் நெஞ்சமே பொலியும் செஞ்சுடர் ஆகிடும்.
உலகம் எங்கள் முகத்தை நோக்கியே
உழன்றுழன் றுவகை கொண்டிடும்;
உலகின் இன்முக உருள் பூழில்எலாம்
உயர்ந்தி னிமையால் ஓங்கிடும்;
மலர்செம் பருத்தி வண்ண வானுடன் வைகறைப் பொழுது அலர்கையில்
நிலவும் வாயிலில் பவழ மல்லிகை
நிறைந்து பூத்தெழில் கொஞ்சிடும்.
எங்க ளின்தொகை கோடிக் கணக்கின, யாங்கள் வாழும்இம் மண்ணினைத்
தங்கும் அன்புடைக் கையால் தாங்குவோம் தழைக்கும் நகர்களை ஒம்புவோம்;
கங்குல் வானிலே செம்ம லர்களால் கண்ம லர்ந்தன மீன்களே:
எங்கள் காலணித் துளசி மேம்பட
ஏகுவோம் தொடர்ந்தே ஏகுவோம்.
எங்கள் காலணித் துாசி மேம்பட
ஏகுவோம் தொடர்ந்தே ஏகுவோம்;
இங்கிவ் உலகினுக்கு ஏற்ற யாவையும் யாங்கள் ஈந்திட முந்துவோம்;
இங்கு வேறு புத்துலகங் கள்ளழின்
இனிது காப்பதில் ஆய்ந்துமே
அங்கண் ஞாலம் அத்த னைக்குமே
அக்க றைபொறுப் பாகுவோம்.
l 85