பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளிநரை என்தலையில் ஒளிகூட்டி னாலும் வீறார்ந்த என்னுடலில் பசுமைநிலை கொள்ளும். இன்னும்என் சீரிளமைக் கைகளினால் நிலங்கள் மலைச்சாரல் புல்வெளிகள் எலாம்.மகிழ்ந்து பூக்கும்.

மாந்தன்தன் வாழ்ங்காலம் நீட்சியெலாம் புதிய மணிப்புனல்கொள் ஆறுகளின் வழிகளையே காட்டும். ஏந்தியுள்ளே கனன்றெழுந்த உணர்வுகள் யாவும் யாம்படைத்த பெருங்கடலுள் அலையாகி நிற்கும்.

என்இனிய தாயகமே, கரும்பைப்போல் மலர்போல்யான்கொண்டேன் முதுமை, நீ புத்திளமை கொண்டாய். முன்னிருந்த என்இளமை கழிந்ததிங்கே ஆனால், முனைந்தகுடி யரசுதன்னில் அதுமலரக் கண்டேன்.

208