பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

அந்தனாஸ் வென்ஸ்லோவ லித்துவேனியா

(1906-1971)

உன்னுடன்

உன்னுடன் வாழ்ந்துளேன் வேனில் காலநல் ஒளிகொள் பூவொடும் பூத்துளேன். முன்னி வீசிடும் இலைகள், பேரலை

முழக்க மாய்ச்சணல் ஆடிடும், வன்னிப் பூமரம் கோடைத் தென்றலில்

வாரி வீசிடும் தேன்மணம், துன்னி ஒன்றியே தோழ மையுடன்

துணைகொள் அங்கமாய் வாழ்ந்துளேன்.

இலைகள் வீழ்ந்திடும் காலப் போதினில்

விதைத்த கோதுமை நல்விதை தலைகொண்டு ஓங்கிடும் கரிசில் மாநிலத்

தாய்மை யின்மடி தாங்கியே, நிலைகொள் இன்பனிக் காலம் முற்றிப்பின்

நீக்கும் வேனில்நாள் வந்ததும் இலைகொண் டோங்கிடும் கோது மைக்கதிர் என்ன உன்னொடும் வாழ்ந்துளேன்.

230