வேட்கை மீறி அன்பும் பாடலும்
விழைந்து நான்மிக ஏங்குகையில்,
வாழ்க்கை ஆர்வமும் உணர்வின் கிளர்ச்சியும்
வளர்ந்தென் உள்ளே பொங்குகையில்,
நேரம் விரைந்து பறந்து செல்வதை
வேண்டேன் - ஏன் இப் பரபரப்பே?
ஆற அமரப் பொழுதின் இன்னலம்
அமர்ந்து நுகர விழைவேனே.
பெருமனம் கொள்வாய் அன்பின் காதலி,
பேசி விடாதே உண்மையினைப்
பெருகும் முதுமை என்றன் மீதினில்
விரைகுது என்பதை விளம்பாதே.
வந்தென் கையைப் பற்றிடு, அன்பே, வையம் முழுதும் சுற்றிடுவோம்இந்த உலகில் காண எண்ணிய
யாவும் இன்னும் காணவில்லை.
கற்பனைச் சிறகினில் ஏறிச் செல்வோம் கடல்கள் கிழித்துச் சென்றிடுவோம்
வெற்று வானை நினைந்து நோக்கிடோம்,
அச்சம் அகற்றி வந்திடுவாய்.
நாவாய் பற்பல நங்கூ ரந்தனை
நாடாது இயங்கும் வழிகளிலும்.
மேலாம் சாலைகள் வேறெவை உண்டு?
மிகவும் சிறக்கும் நம்பயணம்.
உயரே இருக்கும் உடுக்கள் ஊடுநான்
செல்லின் அன்றி வீழ்ந்தாலும் இயம்பு வேன்நான்: மகிழ்ந்தே நின்றிடு;
ஏகேல் துயரே; மேற்செல்லப்
16