பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று விடுதலை யாகிய நல்உரை

எங்கும் பொங்கி நிரம்புதல் காண்கிறோம்! நன்று நீர்இனி முன்நடப் பீர், உயர்

நல்ல பாமாலை மாந்தனுக் களிப்பீர். நன்று நெஞ்சில் கனன்றெழும் செஞ்சொலின் நிமிர்ந்த சீரிய பாடலைத் தருகுவீர். வென்று பெற்ற வீர வெற்றியை

விண்உடுக் கள் ஆக ஏட்டில் ஏற்றுவீர்.

என்றன் உள்.அகத் தெழுந்த சொற்கள்

என்பால் எழுச்சியும் ஆர்வமும் இல்லெனின் என்றும் உயிரிலாச் செத்தையாய்ப் போகுமே,

எரிமலை வாய் உறா வெறுங்குழம் பாகுமே.

நின்ற புதுநடுக் கோடுபோல் மண்ணினை

நெருங்கி வளைக்கும் என்பற்று உறுதியே

என்றும் செருக்கு நெஞ்சொடும் செந்தழல்

உமிழும் கோலொடும் உயர்ந்து வாழ்வனே.

35