பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துள்ளிக்குதித்து ஆடும்.ஒரு குட்டிப்பரி போலே உள்ளம் உவந்து உயர்கனைப்பில் இனிதுவர வேற்கும்.

பனித்தஅதன் பார்வையுடன் பழகும்.அதன் வெம்மை, இனித்தெனிலே வெம்மைதரும் உயிரைக்கனல் ஆக்கும்.

இன்பினிலும் துன்பினிலும் என்னுடனே பாடும் என்னுடைய வாழ்வு.அனைத்தும் இன்புறவே பாடும்.

கம்பிகளில் கம்பங்களில் காணரிய ஒசிவாய்ச் செம்பனியின் துணிக்கைஇசைக் குறிப்புகள்போல் திகழும்.

இக்குளிரை இன்பனியை ஏத்திடுவேன் நானே! இப்பணியின் ஊடுபிறந்து எழுந்தவனும் நானே.

43