பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிமைஎனும் வெட்கமுறு பெயரது நெற்றியின்

அனல்பெற்றுத் தீயும்வரை நானிங்கு மீள்குவேன்;

குடிகொண்ட வீட்டில்மென் துகில்தவழ் இருட்டினில்

குழவியாய் ஆயிரம் முறைபிறந் திடுவேன்நான்.

என்அன்பே உயிரற்ற தலையினை வருடுவேன்,

இடையிலொரு வாளினை உனக்குநான் அணிகுவேன்,

உன்உடன் பிறப்புதான் ஆண்டிகனி சாவிப்பை

உற்றவள் தண்டிக்கப் பட்டவள்நீ யறிகுவாய்.

4 6