இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அடிமைஎனும் வெட்கமுறு பெயரது நெற்றியின்
அனல்பெற்றுத் தீயும்வரை நானிங்கு மீள்குவேன்;
குடிகொண்ட வீட்டில்மென் துகில்தவழ் இருட்டினில்
குழவியாய் ஆயிரம் முறைபிறந் திடுவேன்நான்.
என்அன்பே உயிரற்ற தலையினை வருடுவேன்,
இடையிலொரு வாளினை உனக்குநான் அணிகுவேன்,
உன்உடன் பிறப்புதான் ஆண்டிகனி சாவிப்பை
உற்றவள் தண்டிக்கப் பட்டவள்நீ யறிகுவாய்.
4 6