பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரந்துயர்ந்த உரிமைஉள உழைப்பா ளர்தம் பாடுயர்வால் செழித்துள்ள நாட்டிற் காக இறப்பதற்கும் அணியன் நான், எனைப்பு தைக்கும் இடுகாடோ அவார்’ நிலமாய் இருத்தல் வேண்டும்.

அவார்’மொழிப் பாவலனின் மகனும், நல்ல “அவார்’ மண்ணின் அருந்தோழன் இரசூல் பற்றி “அவார்’ மக்கள் அவார்’மொழியில் பேசல் வேண்டும் “அவார்’மொழியே அவனுக்கின் அமுதம் ஆகும்!

வையம் முழுவதும் சுற்றிவந்தே-பொருள் வல்ல நல் நூல்களை வாங்கி வந்தேன், மெய்யாய் நினைக்கையில் இவ்வுலகே-எழில் மேவும்கை நூல்எனத் தோன்றிடுதே!

தப்புத் தலைப்பில் சிலபகுதி: -சில தாறுமா றாம்கருத்து உள்ளவையாம்: செப்பனிட் டேஇதைச் சீர்திருத்தி - ஒரு செவ்விய நூலாக்கின் நற்பயனாம்.

5