பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னும் பொருளும் இதற்கிணையோ? புரையே இல்லாச் செல்வம்இது!

என்றும் இதன்விலை மதிக்கொனுமோ?

இதனினும் ஒன்றை நினைக்கொனுமோ?

எந்தை பெயரால் சூளுரைப்பேன்,

என்றன் மேம்படு கருவூலம்

இந்த நாட்டுயர் மேன்மைக்கே

ஈடாய் வைத்துயிர் வாழ்ந்திடுவேன்.

காதல் தீ

நிலை தடு மாறிடச் செய்யும் பொல்லா நெருப்பல் லவோ உயர் காதல், மலைநெருப் பாய்அது தீய்க்கினும் அத்தழல் மாந்தவே ஏங்கிடும் நெஞ்சம்!

மற்ற நெருப்பெனில் தள்ளி விலகி மறுபுறம் சென்றிடக் கூடும். உற்ற தழல்இது ஓங்கும், புகையின்றி உள்ளத் திருந்திசை பாடும்.

நீங்கிட நீங்கிட மேலும்மே லும்இது நெஞ்சினில் ஆசையைத் தூண்டும். ஓங்கிடும் இத்தழல் விட்டுப் புறம்செல ஒருவழி இல்லையே யாண்டும்!

73