பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

சோவியத் ஆட்சியை மலரச் செய்த அக்டோப்ர் புரட்சியின் கினேவை, இவ்வகையில் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடுகிருர்கள். மாஸ்கோவில் கொண்டாடுவதைப். போலவே, ஒவ்வொரு குடியரசின் தலைநகரிலும் பிற். ஊர்களிலும் ஆர்வத்தோடு கொண்டாடுகிருர்கள். '

நான், ஒட்டல் அறையில் படுத்தபடி பார்த்த அந்த: அணிவகுப்பு இரண்டரை மணி நேரம் கடந்தது. இடையில், வேடிக்கைப் பார்ப்போர் வெளியேறுவது கடினம். நான் அங்கே சென்று மாட்டிக் கொள்ளாதது அறிவுடைமை என்பதை உணர்ந்து, என்னே நானே தேற்றிக் கொண்டேன்.

பாலிகிளினிக்கிலிருந்து மருத்துவர் வந்து சேர்ந்தார். என்னைச் சோதித்தார். காய்ச்சல் சிறிதளவும் குறைய வில்லை. முதல் நாள் இருந்தபடியே இருக்கிறது என்று கண்டுபிடித்துச் சொன்னர்.

"ப்ளு காய்ச்சலாக இருக்கலாமென்று சந்தேகப் படுவதாகக் கூறினர். அப்படியானல் படுத்த படுக்கை யாக இருந்து விட்டு, ஒன்றும் பார்க்காமலேயே இந்தியாவிற்குத் திரும்ப நேரிடுமோ வென்று கவலைப் பட்டேன்.