பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

காங்கள் பாக்கு நகரத்தில் கண்ட மற்றென்று, விர்வான் மன்னர்களின் அரண்மனை. அது பதினேந்தாம். நூற்ருண்டின் முற்பாதியில் கட்டப்பட்டது. அது அங். காட்டின் கட்டடக் கலைக்கு புகழைத் தேடித் தருகிறது. அதைக் கட்டிய மன்னனின் உடலை அங்கே ஒரு பக்கம் அடக்கம் செய்துள்ளார்கள்.

அரண்மனையின் ஒர் கோடியில் கீழ் மட்டத்தில் குளியல் அறைகள் உள்ளன.

அரண்மனைக்குள் உள்ள ஆண்கள் குளிப்பதற்கு. திங்கட்கிழமையும், பெண்கள் குளிப்பதற்கு புதன் கிழமையும் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்ததாக அங்குள்ள வழிகாட்டி, எங்களுக்கு விளக்கிய போது, கான் அந்த மன்னரையும் அவரது குடும்பத்தையும் எண்ணி பொருமைப்படவில்லை. மாருக, அனுதாபப்பட்டேன்.

முற்காலத்தில் மன்னர் கூட, வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே குளிக்குமளவிற்கு தண்ணிர் தட்டுப்பாடு இருந்த அந் நகரத்தில், இப்போது, தண்ணீரும் வெங்ருேம் எப்போதும் தாராளமாக ஒடிக் கொண்டிருக்கிறது. அவை, என்னைப் போன்ற சாதாரணமானவனுக்கும் கிடைக்கிறது.

அந்த இடிந்த அரண்மனையையும் கோட்டையையும் இப்போதைய ஆட்சி, கன்ருகப் பாதுகாத்து வருகிறது. அவற்றைச் சுற்றிக்காட்டி வர, ஆட்சியின் செலவில் வழிகாட்டிகளே வைத்திருக்கிருர்கள். அவர்கள் வெறும் கற்றுக் குட்டிகள் அல்லர். வரலாறும் தொல்பொருள் விளக்கங்களும் ஆழ்ந்து கற்றவர்கள்.

அரண்மனையிலும் பிற தொன்மையான கட்டடங் களிலும் பயன்படுத்திய பொருள்களே யெல்லாம் பாதி' காத்து, ஆங்காங்கே காட்சியில் வைத்திருக்கிருர்கள்.