பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

"எல்லோர்க்கும் வாழ்க்கைக்கான அ டி ப் ப ைட தேவைகளுக்கு முதலில் ஏற்பாடு செய்வதில் முனைந்திருங் தோம். அப்புறமே இவ்வளவு பெரிய அரங்கத்தைக்

கட்டுவதில் கவனஞ் செலுத்தினேம்" என்ருர்கள்.

எது முன்னே செய்ய வேண்டியது. எது அடுத்துச் செய்ய வேண்டியது என்று முடிவு செய்வதற்கும் தெளி வான அறிவு தேவை.

விளேயாட்டுப் போட்டியை பத்து.கிமிடங்கள் கவனித் தோம். பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். டாஷ்கண்ட் ஒட்டலுக்கு எதிரில் பெரிய நாடக அரங்கம். அது மூன்று மாடிக் கட்டடம். அங்கே சென்ருேம். நாடகம் கடந்து கொண்டிருந்தது. அரங்கத்தை நிர்வகிப்பவர்களில் ஒருவர் எங்களே உள்ளே அழைத்துக் கொண்டு போனர். அவ்வேளை, இடைவேளை மணி ஒலித்தது. விளக் கொளியில் அவ்வரங்கின் அழகையும் அமைப்பையும் பார்த்து விட்டு வெளியே வந்தோம்.

கில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டதாகவே தெரிய வில்லை. அவ்வளவு திறமையாக, பழைய அமைப்பின் படியே சீர் செய்திருந்தார்கள். இச் சீரமைப்பிற்கும் 'அண்டைக் குடியரசுகள் உதவின.

நான் களைத்துப் போய் இருந்ததால், நாடகம் பார்க்கத் தங்காமல், தனியே ஒட்டலுக்குத் திரும்பி விட்டேன், 'நாடகமே உலகம்' என்பதை எண்ணிக் கொண்டே உறங்கி விட்டேன்.