113
113
" சரி; உங்கள் விருப்பம் போல செய்யுங்கள்” என்று கூறி விட்டார் மலா.
நகைகளை எல்லாம் விற்றுவிட்டார் ஜவஹர். இவ்வளவும் எதற்காகச் செய்தார் ?
அன்னை ஸ்வருபராணி நேருவுக்காக, அரசி போல் வாழ்ந்த அவர் பணம் இல்லையே என்று கவலைப்படக் கூடாது என்பதற்காக, தள்ளாத வயதில் செலவுக்கு சங்கடப் படலாகாது என்பதற்காக.
எல்லாம் தாய்க்காக.
நாற்பத்தி ஒன்றாம் அத்தியாயம் தள்ளு ஜவஹரை சிறையில் !
1934-th ஆண்டு.
பிரிட்டிஷ் அரசாங்கம் சும்மா இருக்குமா? எப்படி இருக்கும் ? ஜவஹரைக் கண்காணித்துக் கொண்டே இருந்தது. மறுபடியும் சி ைற யி ல் தள்ளுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தது.
இது ஜவஹருக்கும் தெரியும். எனவே அவர் என்ன செய்தார் ? கவனிக்க வேண்டிய காரியங்களை எல்லாம் விரைவாக கவனித்தார். கல்கத்தா சென்று கமலாவின் உடல்நிலை பற்றி டாக்டர்களிடம் ஆலோசிக்க எண்ணினார். கல்கத்தாவுக்குச் சென்றார். மூன்று நாள் அங்கே தங்கினார், வைத்தியர்களைக் கலந்து ஆலோசித்தார் ; நண்பர்களைக் கண்டு பேசினார் ; பொதுக்கூட்டங்களில் பேசினார். புறப்பட்டார் அலகாபாத்துக்கு.
14