பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

87

'கள்ளுக் கடைக்கும் சுயராஜ்யத்துக்கும் என்ன சம்பந்தம் கள்ளுக்கடை மறியல் செய்துவிட்டால் போதுமா அது தான் சு ய ர ா ஜ் ய மா ?” என்றார் மனம் வெதும்பினார், கொதித்தார்.

அன்சாரி மாளிகைக்கும் வைசிராய் மாளிகைக்கும் இடையே உள்ள தூரம் ஐந்து மைல்.

மகாத்மா என்ன செய்தார் ? நடந்தே சென்றார்; நடந்தே திரும்பினார். பதினைந்து நாட்கள், காந்தி இர்வின் சமரசப் பேச்சு நடைபெற்றது.

“சத்தியாக்கிரகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'; என்றார் இர்வின்.

சத்தியாக்கிரகத்தை நிறுத்தி வைக்கிறேன் ' என்றார்

காந்தி.

நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது. விவாதம் எதிலே ? சொல் அளவிலேதான். ' போலீசின் வரம்பு மீறிய செயல் குறித்து விசாரிக்க வேண்டும்’ என்றார் காந்தி,

'முடியாது!" என்றார் இர்வின்.

காந்தி விடாப்பிடியாக இருந்தார். இப்படியாகப் பல நாள் பேசினார்கள்.

டாக்டர் அன்சாரி வீடு அல்லோ கல்லோலப்பட்டது.

எதிர்பாராத நண்பர் பலர் வந்தனர்; காந்திஜியைக்

கண்டனர்; பேசினர்; காரியக் கமிட்டி அங்கத்தினரைப் பார்த்து பேசினர்.

காங்கிரசை எதிர்த்துப் பேசியவர். ஏகாதிபத்தியத்துடன் உறவு கொண்டவர் பலரும் இப்போது காங்கிரசுடன் நேசம்