பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 * செளந்தர்ய.

தற்போது கொண்டுவர முடியாது. கண்ணில் விளக்கெண் ணெய் போட்டுக்கொண்டு proof பார்ப்பார். ஆனால் அதன் வியாபாரத்தில் தோற்றுவிட்டோம். முறை தெரிந்து கொள்ளாததால் எங்கள் தலையைத் தடவிவிட்டார்கள். ஆனால் அது இப்போது collecters it ஆகிவிட்டது. ஒரு வீட்டில் பார்த்தேன். குங்குமம், மஞ்சள் பூசி பூப்போட்டு சுவாமி பிறைக்கே ஏற்றி இருந்தது. அதைக் கடன் கேட்கவோ, பிரட்டிப் பார்க்கவோ மனம் அஞ்சிற்று. இதை மாசுவின் சிகரமாகத்தான் நான் பார்க்கிறேன்.

ஓரிரவு. முற்றிய வேளையில் கதவுத்தட்டல் கேட்டுத் திறந்தால் மாசு.

என்ன மாசு? "ஒண்ணுமில்லை. பார்க்க வேணுமென்றிருந்தது. பார்த்து விட்டேன்.”

அப்படியே படியிறங்கி சரசரவென்று போய்விட்டார். நானும் அவரை நிறுத்தி எப்படி உள்ளே அழைப்பேன்? என் தங்கைக்கு அன்றைய தினம் கொள்ளியிட்டிருக்கிறேன். அம்மா ஒரு மூலையில் சுருண்டு கிடக்கிறாள். நான் யாருக்கும் சொல்லி அனுப்பவில்லை. ஆனால் மாசுவுக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்? மாசு தெரிந்துவரவில்லை. சதையாட்டம். டெலிபதி. அவருக்குக் காரணம் தெரியாது. “என்னமோ தோன்றிற்று. பார்க்க வந்தேன். அந்த சூட்சும உணர்வு, பரிவு அவருக்குள் பேசியிருக்கிறது.

அப்போது திருவல்லிக்கேணியில் குடித்தனம் இருந்தோம். முற்றிய இரவில் மாசு டவுனிலிருந்து வருவார். இருவரும் கிளம்பிப் பேசிக்கொண்டே பீச்ரோடிற்கு போவோம். அப்படியே அதுவழி வார் மெமோரியலுக்கு