பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 175

வேறு எதற்கும் இல்லை. அப்படி இருந்தும் இத்தனை துன்பங் களின் இடையில் மனிதர் இருந்து பெற்றுப் பெருகி வளர்ந்து வாழ்ந்து அறுபது வருஷம் எழுபது வருஷம் இருந்து விட்டுத்தான் போகிறார்கள்; இதெல்லாம் நம்முடைய செயலா? சர்வ ஜீவன்களும் தாய் வயிற்றிலிருந்து பிறந்து அற்புத மாளி கைகளாக இயற்கையில் தாமதமாகவே வளர வேண்டுமென்றும், அதனதன் கடமையைச் செய்து உலகம் அழிந்து போகாமல் நிலை நிற்க வேண்டுமென்றும் ஆக்ஞாபித்துள்ள கடவுள், சதா காலமும் சர்வ வியாபியாக நிறைந்து, சூத்திரதாரிபோல மறைந் திருந்தபடி எல்லா ஜீவன்களையும் தனது விருப்பத்தின்படி நடத்திக் காப்பாற்றி வருகிறார். அப்படி இருக்க, ஈசுவரனுடைய கட்டளையாகிய விதி ஏற்பட்டிருந்தால் அன்றி, இந்தப் பாம்பை நான் மிதித்திருந்தால் கூட இது என்னைக் கடித்திருக்காது. எனக்கு ஏற்பட்ட இரண்டு அபாயங்களுக்கும் தாங்களே காரண மானவர்களன்றி, வேறு எவருமில்லை. வள்ளி நாய்கியைப் பிடிப்பதற்கு முருகக் கடவுள் மதயானையைக் கொணர்ந்து காட்டி பயமுறுத்தி, அவளே ஒடி வந்து அணைந்து கொள்ளும் படி செய்யவில்லையா அதுபோலவே இப்போது தாங்கள் செய்திருக்கிறீர்கள். அன்றைய தினம் சமுத்திரக்கரையில் நான் வந்ததைக் கண்ட தாங்கள் மோட்டார் வண்டியாகிய காட்டா னையை வரவழைத்து என்னைப் பயமுறுத்தி, நான் தங்களு டைய உதவியை ஏற்றுக் கொள்ளச் செய்து, தாங்கள் என்னு டைய பிரியத்தை எல்லாம் கவர்ந்து கொண்டீர்கள். அப்படிக் கவர்ந்திருந்தும், நான் இதுவரையில் தங்களிடத்தில் வந்து சேரவில்லையே என்ற ஆத்திரத்தினால், தாங்கள் இந்தப் பாம்பை வரச் செய்து, மறுபடியும் என்னுடைய பிரியத்தை வலுக்கட்டாயமாக அடைந்து, என்னுடைய உடம்பையும், உயிரையும், கற்பையும் கொள்ளை கொண்டு விட்டீர்கள். இப்படிப்பட்ட காரியங்களெல்லாம் நடப்பதற்கு மூலாதாரமாகத் தாங்கள் இருந்து கொண்டு, எய்தவனிருக்க அம்பை நொந்து கொள்வதுபோலத் தாங்கள் தங்களுக்குத் துணைக்கருவியாக வந்து உதவிய இந்தப் பாம்பை நொந்து கொள்வது தருமமா? இப்போது நாம் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து எவருக்கும் கிடைக்காத பரமசுகம் அனுபவிக்கும்படி செய்த பேருபகாரி