பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 203

விலங்கிட்டுக் கொண்டு போகிறார்கள் என்பதும் தெரிந்தன. ஆகவே பெண்டீர் யாவரும் மற்ற எல்லா விவரத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினால் தூண்டப்பட்ட வர்களாய், அங்கே நடந்த சம்பாஷணையை நன்றாக உற்றுக் கவனித்தனர். முன் சொல்லப்பட்டபடி சுந்தரமூர்த்தி முதலியார் போவீஸ் இன்ஸ்பெக்டரை நோக்கிப் பேசியவுடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பராங்குசம் பிள்ளை என்பவர் கம்பீரமாகவும், நிதானமாகவும் எல்லோரையும் நோக்கி, 'உங்களுக்கெல்லாம் எவ்விதச் சம்பந்தமும் இல்லாத இந்த விஷயத்தில் நீங்கள் தலை யிட்டு இடைஞ்சல் செய்வீர்களானால், சர்க்கார் உத்தியோ கஸ்தார் சட்டப்படி தமது கடமையைச் செய்வதைத் தடுப்பதான பெரிய குற்றத்தைச் செய்தவர்கள் ஆகிவிடுவீர்கள். நீங்கள் நூற்றுக்கணக்கில் கும்பலாக இருக்கிறீர்கள். நாங்கள் நாலைந்து பேர்தானே இருக்கிறோம் என்று உங்கள் கைவரிசையைக் காட்டுகிறீர்கள் போலிருக்கிறது. செங்கோலுக்கு முன் எப்படிப் பட்டவருடைய கையும் ஓங்காது. நீங்கள் இப்போது எங்களை அடித்துக் கொன்று விட்டாலும், நாங்கள் இறந்து போகத் தயாராக இருக்கிறோம். ஆனால் இன்னும் கொஞ்ச நேரத்தில் பீரங்கிப் படைகளோடு சிப்பாயிகளை அழைத்துக்கொண்டு போலீஸ் கமிஷனர் இங்கே வந்து உங்களையெல்லாம் அமுக்கிக் கொண்டு போய் பழிக்குப்பழி வாங்கி விடுவார் என்பது மனசில் இருக்கட்டும். நாங்கள் எங்கள் வீட்டுக் காரியத்திற்காக இங்கே வரவில்லை. இந்த கண்ணபிரான் முதலியாரைப் பிடித்துக் கொண்டு போய்ச் சிறையில் வைக்கும்படி எங்களுக்கு வாரண்டு வந்திருக்கிறது. அதற்காக நாங்கள் இவரைப் பிடித்துக்கொண்டு போகிறோம். இவர் கலியான சமயத்தில் இருக்கும் இந்த அசந்தர்ப்ப வேளையில் நாங்கள் வந்து பிடிப்பது எங்களுடைய மனசுக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் இந்த அசந்தர்ப்பத்தைக் கவனித்து, வாரண்டை நிறைவேற்றாமல் விட்டுவிட எங்களுக்கு அதிகாரமில்லை. இவரைப் பிடிக்காமல் விட்டுவிட்டு நாங்கள் திரும்பிப் போனால், எங்களுடைய உத்தியோகம் போய்விடும். அது போனாலும் போகிறதென்றால், துரைத்தனக்காரர் இவரை விட்டு விட மாட்டார்கள். கண்டுபிடிக்காவிட்டால், வேறே யாராவது இன்ஸ்பெக்டர் நூறு