பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசம் நாசம் கம்பளி வேஷம் 243

உனக்கு ஒருவித இழிவும், பழிப்பும், அதைப்பற்றி பிறர் புரளி செய்யும்படியான சந்தர்ப்பமும் ஏற்படும். அதுவும் அன்றி, நீ என்னிடத்தில் வந்து என்னைப் பார்ப்பதற்கு அநுமதி கொடுத் துள்ள, முன் குறிக்கப்பட்ட பெரிய உத்தியோகஸ்தருக்கு பெருத்த துன்பமும் நேர்ந்துவிடும். ஆகையால், நீ வருவது எவருக்கும் தெரியாதபடி மறைவான ஒரு பெட்டி வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டு வந்தால், இந்தக் கடிதம் கொண்டு வரும் ஆள் உன்னை நேராக என்னிடத்திற்கு அழைத்துக் கொண்டு வருவான். மற்ற சகலமான விஷயங்களையும் நாம் சவிஸ்தா ரமாக நேரில் பேசிக் கொள்ளலாம்.

வீட்டிற்குள் அந்தப்புரத்தில் தெய்வம்போல வைத்துப் போற்றப்படத் தகுந்தவர்களான உன்னைப் போன்ற மெல்லிய லார்களை அன்னியப் புருஷர் இருக்கக்கூடிய இப்படிப்பட்ட பொது ஸ்தலங்களுக்கு வரும்படி அழைப்பது, ஆண்மைத்தனம் உள்ள புருஷர் செய்யத்தக்க காரியமல்ல. ஆனாலும், வேறே வழியில்லாது இருப்பதாலும், இந்த உலகத்தில் உன்னைத்தான் நான் என்னுடைய உயிருக்கு உயிராக மதிப்பதாலும், நீ உன் னுடைய உடல், பொருள், அவி ஆகிய மூன்றையும் எனக்காக தத்தம் செய்துவிட்டதாக நேற்றைய தினம் உறுதிமொழி கூறியதைக் கருதியும், நான் இந்த அபாயத்திலிருந்து என்னைத் தப்புவிப்பதான பெருத்த கீர்த்தியையும், புண்ணியத்தையும் உனக்கே உண்டாக்கிக் கொடுக்க எண்ணி உனக்கு இவ்வாறு எழுதத் துணிந்தேன்.

ஆனால், இன்னொரு முக்கியமான விஷயம். இந்தக் கடிதம் உன்னிடத்தில் வந்து சேரும்போது, அவ்விடத்து நிலைமையும், சந்தர்ப்பமும் சரியாக இருந்தால் மாத்திரம், நீ புறப்பட்டு வரலாம்; அங்கே அசந்தர்ப்பமாக இருந்தால், நீ உன்னுடைய செளகரியம் போல நடந்து கொள்ளலாம்.

உன்னிடத்தில் நான் இவ்வளவு அதிகமாக உரிமை பாராட்டி இந்தக் கடிதம் எழுதிய விஷயத்தைப் பற்றி நீ ஆயாசப்பட மாட்டாய் என்று நான் உறுதியாக நம்பி இருக்கிறேன். மற்றவை நேரில்

இங்ங்ணம் : அன்பன் கண்ணபிரான்