பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

செளந்தர கோகிலம்



நீங்கள் போய் மரியாதை செய்து எதிர்கொண்டழைத்து வாருங்கள்” என்று கூறினான்.

அவன் பேசி வாய்மூடு முன் கற்பகவல்லியம்மாள் {3}}{r}: விற்கு ஒடிக் கதவண்டை நின்று, அப்போது வாசற்படியில் ஏறிக் கொண்டிருந்த துபாஷ் ராஜரத்ன முதலியாரது மனையாட் டியான பூஞ்சோலையம்மாளை மகிழ்ச்சியும் புன்னகையும் காட்டிய முகத்தோடு பார்த்து, 'வாருங்கள் வாருங்கள்” என்று மிகுந்த வணக்கமாகவும் மரியாதையாகவும் வரவேற்று, உள்ளார்ந்த அன்போடு உபசரிக்க, சுமார் நாற்பது வயதடைந்த வளாகத் தோன்றிய ஒரு ஸ்திரீ புன்னகை தவழ்ந்த இனிய முகத்தினளாய், "வருகிறேன்” என்று அன்பாக மறுமொழி கூறி வணங்கியபடி உள்ளே நுழைந்தாள். அந்த மாது நன்றாகச் சிவந்து தொந்தி தொப்பைகள் விழுந்த உடம்பைப் பெற்ற வளாய்ப் பெண் யானை போல நடந்து வந்தாள். ஆனாலும், அவளது முகம் மாத்திரம் இளமையாகவும் வசீகரமாகவும் இருந்தது. அந்த அம்மாள் விதவை என்பதற்கு நெற்றியில் திலகமும், கழுத்தில் திருமாங்கல்யமும், முகத்தில் மஞ்சளும் நீங்கலாக, மற்ற ஆடையாபரணங்கள் யாவும் ஏராளமாகக் காணப்பட்டன. காதுகளில் வைரக் கம்மல்கள் நட்சத்திரச் சுடர்கள் போல எரிந்து டால் வீசின. ஐந்நூறு ரூபாய்க்குமேல் பெறத்தக்க ஜரிகைப் புட்டாக்கள் நிறைந்த பட்டுச்சேலை அந்த அம்மாளது உடம்பின் அழகை ஆயிரமடங்கு பெருக்கிக் காட்டியது. வைரங்கள் பதிக்கப்பெற்ற ஏராளமான கல்கத்தா வளையல்கள் கைகளிரண்டிலும் காணப்பட்டன. கழுத்தில் வைரங்களும், கெம்புகளும், பச்சைகளும் சரம்சரமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. சிரத்தின் கூந்தல் நீளமாக விடுத்து முடியப் பெற்றிருக்க, அதன் முடிச்சு தேங்காய் அவ்வளவு பருமன் இடுப் பின் மீது தொங்கிக் கொண்டிருந்தது. அந்த ஸ்திரீ நெடுங் காலமாக மேம்பட்ட பதவியிலிருந்து சகலமான செல்வங் களையும் செல்வாக்கையும் சுகபோகங்களையும் சம்பூரணமாக அநுபவித்த சீமாட்டியென்பதை அவளது தோற்றத்தின் செழுமையும் மினுமினுப்பும் உடனே வெளிப்படுத்திவிட்டன.

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பூஞ்சோலையம்மாள் முன் னால் வர, அவளைத் தொடர்ந்து இரண்டு தாதிகள் பெருத்த