பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 செளந்தர கோகிலம் அதிகம் ஆகவில்லை. உடம்பு நிரம்பவும் திடமாகத் தானே இருக்கிறது. நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால், உங்களுடைய செல்வத்தைக் கருதி, நான் பெண்ணைக் கொடுக்கிறேன், நான் பெண்ணைக் கொடுக்கிறேன் என்று ஆயிரம் பேர் முன்னுக்கு வந்து விழுவார்கள். நல்ல பெரிய பெண்ணாகப் பார்த்து பேசாமல் கட்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய கஷ்டம் எல்லாம் நிவர்த்தியாகிவிடும். உங்களுடைய தள்ளாத காலத்தில் நீங்கள் தலைவலியென்று படுத்துக்கொண்டால், உங்களுக்குப் பற்றுப்போட ஒரு மனிதர் வேண்டாமா நீங்கள் யோசிக்காமல் அப்படியே செய்து விடுங்கள். உங்கள் பிள்ளை நல்ல குணவான். உங்களுடைய நன்மைக்கு அவர் குறுக்கே நிற்கமாட்டார்” என்கிறார்கள். இன்னும் சிலர், “என்ன, தாத்தா, உங்களுடைய வயது அதிகமாய்விட்டது. உங்களுடைய ஆஸ்தியைக் கருதி யாராவது பெண் கொடுத்தாலும், பெண் யெளவனப் பருவம் உள்ளதாக இருக்கும். ஆகையால், அது உங்களை மதித்து அடங்கி நடக்கும் என்பதை நாம் எப்படி நிச்சயமாகச் சொல்லு கிறது. பிள்ளையார் பிடிக்க, அது குரங்காய் முடிந்ததென்கிறபடி, நீங்கள் rேமப்பட வேண்டுமென்று ஒரு பெண்ணைக்கட்ட அதுவே உங்களுக்கு எமனாக முடிந்தாலும் முடியும். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். பேசாமல் யாருக்கும் தெரியாமல் காதும் காதும் வைத்ததுபோல, எவளாவது ஒருத்தியை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளுங்கள். அவள் ஒழுங்காக நடக்கிறவரையில் பாருங்கள். தவறாக நடந்தால், கழுதையை ஒட்டிவிடுங்கள்' என்கிறார்கள். இப்படி உலகம் பலவிதமாக இருக்கிறது. இவைகளையெல்லாம்விட பெரிய வேடிக்கையொன்றை உங்களுக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த ஊர் வடக்கு வீதியிலுள்ள பெரியபண்ணை அண்ணாசாமி முதலியாரைப்பற்றி உனக்கு நன்றாக நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன். இந்த ஜில்லாவிலேயே அவருக்கு மிஞ்சிய பணக்காரர் யாருமில்லை என்று ஜனங்கள் சொல்ல நீ கேட்டிருப்பாய். அது எவ்வளவு தூரம் நிஜம் என்பது சந்தேகம். இருந்தாலும் எனக்குத் தெரிந்த வரையில் அவருக்கு நூறு வேலி நஞ்சை நிலமிருக்கிறது. வருஷத்தில் எல்லாச் செலவுகளும் போக, சுமார் பதினாயிரம் ரூபாய்க்குமேல் மிச்சப்படுமென்பதைப்பற்றிச் சந்தேகமே இல்லை.