பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 செளந்தர கோகிலம் காண அவன் சகியான். அரிசிப் பானையை அடுப்பில் ஏற்றி இறக்குவதைத் தவிர மற்ற சலகமான காரியங்களையும் அவளுக்கு அவனே செய்து கொடுத்து விடுவான். அவனுக்கே சமையல் வேலையும் தெரிந்திருக்குமானால், பெண்ஜாதியை அடுப்பண்டையே அவன் போக விடமாட்டான். தான் திருடியோ, பொய் சொல்லியோ எப்படியாவது பணம் சம்பாதித்து தன் மனைவி கஷ்டப்படாமல் காப்பாற்றுவதோடு, வயிற்றை ஒடிக்கி, வாயை ஒடுக்கி, அவளுக்கு நல்ல புடவைகள், உயர்ந்த நகைகள் முதலியவைகளை வாங்கிக் கொடுத்து அவளை சந்தோஷப்படுத்த முயன்றுகொண்டே இருப்பான். யெளவனப் புருஷர்களோ பெண் தனக்குரிய சகலமான காரியங்களையும் செய்து அடிமைபோல நடந்து கொள்ள வேண்டுமென்றும், எல்லா விதத்திலும் அவள் தம்மை சந்தோஷப்படுத்தித் தம்முடைய பிரியத்தைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டும் என்றும் எதிர் பார்ப்பார்கள். வயதான புருஷர்களோ, தாம் எப்பாடு பட்டாவது, எவ்விதம் நடந்து கொண்டாவது அவள்ை சந்தோஷப்படுத்தி, அவளுடைய மனம் தம்மிடம் பிரியம் கொள்ளும்படி செய்யவேண்டுமென்று இரவு பகல் அதே கவலையாகவும் கவனமாகவும் இருப்பார்கள். இதோ மூலை வீட்டு அகிலாண்டத்தம்மாள் தன்னுடைய மூத்தபெண்ணை அறுபது வயசான ஒரு கிழவருக்குக் கட்டிக்கொடுத்தாள். அதைப் பற்றி எல்லோரும் ஆநந்தமடைந்தார்கள். மூத்தபெண் புருஷனோடு சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் இருந்து, அந்த வீட்டுக்கே ஒரு சக்கரவத்தினிபோல விளங்கி திருப்தியாகவும் rேமமாகவும் இருக்கிறாள். அவளுக்கு இரண்டு மூன்று குழந்தைகளும் பிறந்துவிட்டன. இளைய பெண் வீட்டுக்குப் போகுமுன் புருஷன் காலராவினால் மாண்டுபோய் விட்டான். பெண் சரியான பக்குவகாலம் அடைந்து துக்கமும், துன்பங்களும் அநுபவிப்பதோடு தாய் வீட்டிலிருந்து, நின்றால் குத்து, உட்கார்ந்தால் உதையாகத் 'தின்று, இருக்கவும் மாட்டாமல், சாகவும் மாட்டாமல் போக்கிடமற்றுத் தவிக்கிறது. இந்த விஷயங்களையெல்லாம் யோசிக்க, யோசிக்க நம்முடைய பெண்ணை, நமது சவுளிக்கடைக்காரர் குஞ்சிபாத முதலியார் கட்டிக்கொள்ள இணங்கினால், இரட்டைச் சந்தோஷத்தோடு