பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O3 செளந்தர கோகிலம் பிடித்துக்கொண்டு போயிருக்கிறீர்கள் போன இடத்தில் அவர்களைக் கடிதம் எழுதச் செய்து என்னை வருவிப்பது எளிதென்று எண்ணி நீங்கள் இவ்விதமான முழுப்புரட்டில் இறங்கியிருக்கிறீர்கள். இப்போது எனக்கு எல்லாம் நன்றாக விளங்கிப் போய்விட்டது. ஆனாலும், இவ்வளவு தூரம் உங்களுடைய அதிகாரத்தையும் புத்திசாலித்தனத்தையும் உபயோகித்து வேலை செய்த நீங்கள் முக்கியமான ஒரு விஷயத்தை மாத்திரம் அலட்சியமாய் மதித்துவிட்டீர்கள். என்னுடைய மனவுறுதி எப்படிப்பட்டது என்பதையும், நான் உங்களுடைய கருத்திற்கு இசையத் தகுந்தவளா என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளாமல், இவ்வளவு தூரம் வீண்பாடு பட்டதுதான் என் மனசில் சிரிப்பை உண்டாக்குகிறது. ஐயா! உங்களுடைய தந்திரமெல்லாம் கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்ததுப் பிடிக்கிற தந்திரமேயன்றி வேறல்ல. என் விஷயத்தில் நீங்கள் கொண்டுள்ள கருத்து ஒரு நாளும் பலியாகாது. என்னைப் படைத்த ஈசுவரனே நேரில் வந்து அவருடைய வல்லமை முழுவதையும் உபயோகப்படுத்தினாலும், இந்த விஷயத்தில் என் மன உறுதியை மாற்ற அவரால் இயலாதென்று நான் துணிந்து சொல்லுவேன். நீங்கள் என்னைக் கண்ட துண்டமாய் செட்டிச் சித்திரவதை செய்தாலும், நான் என் கற்பு நிலை தவறும்படியான காரியத்தை மனசாலும் எண்ணமாட்டேன். என் உயிரை வேண்டுமானாலும் நான் பரம சந்தோஷத்தோடு இழந்து விடுவேன்; என் கற்பை மாத்திரம் இழக்கமாட்டேன். இது சத்தியமான விஷயம். வீணாக நீங்கள் என்னை வதைப்பதனாலும், உங்கள் பொழுதைச் செலவழிப்ப தனாலும் கடுகளவாவது உங்கள் எண்ணம் நிறைவேறப் போகிறதில்லை. தயவு செய்து என்னை வெளியில் அனுப்பி விடுங்கள். கதவை அப்புறத்தில் தாளிட்டவர் கதவண்டையிலே தான் நிற்பாரென்று நினைக்கிறேன். தயவு செய்து அவரைக் கூப்பிடுங்கள்' என்று அழுத்தமாகவும் பணிவாகவும் கூறினாள். அந்த மாதரசியினது புத்திசாலித்தனமான யூகங்களையும், ஆணித்தரமான வாதங்களையும் கேட்ட இன்ஸ்பெக்டர் பராங்குசம் பிள்ளை முற்றிலும் பிரமித்துப் போனார். ஆனாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அவள் தனிமையில்