பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. செளந்தர கோகிலம் ளையடிக்கிற திருட்டுக் கழுதை மகா யோக்கிய ஸ்திரீபோல, இந்தப் பங்களாவில் எல்லோருக்கும் சரி சமானமாக வந்து உட்கார்ந்துகொண்டு, எல்லோருக்கும் தலைகுணிவையும் அவமானத்தையும் உண்டாக்கி வைக்கிறாய்! இப்படிச் செய்த உன்னுடைய தலையைச் சிரைத்து, சாணியைக் கரைத்து ஊற்றி, துடைப்பக்கட்டைப் பிரயோகம் செய்து, கழுதை மேல் ஏற்றி வைத்து மேளம் பாண்டு வானவேடிக்கைகளோடு ஊர்வலமாகக் கொண்டுபோய், உன்னை உயிரோடு சுடுகாட்டில் வைத்துக் கொளுத்த வேண்டும். அப்படிச் செய்யாமல், வெறும் வார்த்தையாக உன்னோடு பேசினால், அது மரியாதையாகாது தான். நீ சொல்வது சரியான பேச்சு. எங்களுடைய பங்களாவில் குப்பைக்காரி வேலைசெய்யும் யோக்கியதைகூட உனக்கு இல்லை. அப்படிப்பட்ட பெரிய மனுவியான உன்னோடு பேசு வதற்குக்கூட எனக்கு இஷ்டமில்லை. ஆகையால் நான் ஒரே ஒரு வார்த்தை உனக்குக் கண்டிப்பாகச் சொல்லுகிறேன். நாளைக்குப் பொழுது விடிவதற்குள் நீ இந்தப் பங்களாவைவிட்டு வெளியில் போய்விட வேண்டியது. பொழுது விடிந்தபிறகும் நீ இங்கே இருப்பாயானால், நான் மேலே சொன்ன மரியாதைகளெல்லாம் உனக்குக் கட்டாயம் நடந்தே தீரும். நான் ஏதோ விளையாட் டுக்காகச் சொல்லுகிறேன் என்று நினைத்து நீ அசட்டையாக இருந்தால், அதனால் வருவதை நீ அநுபவிப்பது தவறாது. தெரிகிறதா? ஜாக்கிரதை' என்று முறுக்காகவும் கடுகடுப்பாகவும் கண்டிப்பாகவும் கூறிவிட்டு அவளைப் பார்த்துப் பயங்கரமாக ஒரு விழி விழித்து நறநறவென்று பல்லைக் கடித்துவிட்டு, ஒரே விரைப்பாக நிமிர்ந்து நின்றபடியே நடந்து அந்த அந்தப்புரத்தை விட்டு வெளியில் போய்விட்டாள். - 女 ,★ ★ அந்த இரவு கழிய, மறுநாட் காலை நேரம் வந்து சேர்ந்தது. இரவு முழுதும் இமைகளை மூடாமல் படுக்கையில் தத்தளித்துத் துவண்டு கிடந்த மடவன்னமான கோகிலாம்பாள் அதிகாலை யில் எழுந்து தனது காலைக் கடன்களை முடித்துக்கொண்டு தனது தாய் சயனித்திருந்த இடத்திற்குப் போக அந்த அம்மாளும் எழுந்து கொண்டிருக்க, அவளையும் அழைத்துக்கொண்டு,