பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 1Ο7

காரர்கள் இருந்த இடத்திற்குப் போய்விட்டாள். அவள் கூறியதையெல்லாம் அரை மனதோடு கேட்பவள்போல நடித்த புஷ்பாவதியம்மாள் தனியாக விடப்பட்டவுடன் விரைவாக டெலிபோனண்டை சென்று சுந்தரமூர்த்தி முதலியாரை அழைத்து, செளந்தரவல்லியம்மாள் தங்களது விருப்பத்தின் படியே காரியத்தை நிறைவேற்றப் போகிறாள் என்பதைத் தெரிவித்து, அவள் கேட்டுக்கொள்வதுபோலக் கோகிலாம்பாளை முன்னால் அனுப்பி, மினியனோடு பின்னால் வரும்படி கூறி விட்டு செளந்தரவல்லியம்மாள் வேலைக்காரர்களிடம் என்ன பேசுகிறாள் என்பதை அறிந்துகொள்ளும் பொருட்டு அங்கே சென்றாள்.