பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 செளந்தர கோகிலம்

இருக்கிறது. இதைத்தான் நாங்கள் பார்வையிட்டது. இதையே கட்டிவிடுவோம். நமக்கு ஒரு குறைவும் வந்துவிடப் போகிற தில்லை. அந்தப் பெண்ணைவிட இந்தப் பெண் வயசில் சுமார் 4 வருஷம் மூத்ததாயிருக்கும். மற்றபடி அழகில் எவ்விதக் குறைவுமில்லை’ என்றார்கள்.

அழகிய மணவாளர், “சரி, உங்களுக்கு இஷ்டமானால், அப்படியே நடக்கட்டும். ஐயா புரோகிதரே. ஆகட்டும் மேல் காரியம்” என்றார்.

உடனே போலீஸ் கமிஷனர் அழகிய மணவாளரைப் பார்த்து, “கொஞ்சம் பொறுங்கள். நான் முக்கியமான சில கேள்விகளை இந்த முதலியாரிடம் கேட்க வேண்டும். அதைக் கேட்ட பிறகு நீங்கள் இந்தக் கவியாணத்தை நடத்தப் பிரியப்பட்டால் நடத்தலாம். அதற்கு மாத்திரம் அநுமதி கொடுக்க வேண்டும். நான் உங்களுடைய நன்மையைக் கருதியே இங்கே வந்திருக்கிறேன்” என்றார்.

உடனே அழகிய மணவாளர் சுந்தரமூர்த்தி முதலியாரை நோக்கி, “அடே சுந்தரமூர்த்தி! போலீஸ் கமிஷனர் ஏதோ கேள்விகள் கேட்க வேண்டுமாம். அவர் கேட்பதற்கு நீ உத்தரம் சொல்’ என்றார். - -

சுந்தரமூர்த்தி முதலியார், “ஆகா! சொல்லுகிறேன்!” என்று தைரியமாக மறுமொழி கூறினார்.

போலீஸ் கமிஷனர் : ஐயா! நீங்கள் எந்த ஊர் ஜெமீந்தார்? சுந்தரமூர்த்தி முதலியார் : என் தகப்பனார் தஞ்சை ஜில்லா விலுள்ள கோவிந்தபுரம் என்னும் சமஸ்தானத்தின் ஜெமீந்தார்.

போலீஸ் கமிஷனர் : அவர் இப்போது இங்கே வந்திருக் கிறாரா?

சுந்தரமூர்த்தி முதலியார் : அவர் வரவில்லை. இந்தக் கலியாணம் திடீரென்று நேர்ந்தது. சில காரணங்களைக் கொண்டு இதை அவசரமாக முடிக்க வேண்டியிருந்தது. அவரும் சரி, என்னுடைய மற்ற பந்து ஜனங்களும் சரி. இந்தக் கலியாணத்துக்கு வர இயலாமல் போய் விட்டது.