பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 243

நல்ல புத்திமான். அவர்களுடைய மனசுக்கும் இது உறுத்த லாயிருக்கும் அல்லவா. அதையும் தாங்கள் கவனிக்க வேண்டாமா! இன்னொரு விஷயமும் இருக்கிறது. தாங்கள் ஏதோ ஒரு வியாஜ்யத்தை வைத்துக் கொண்டு காஷாயம் வாங்கிக் கொண்டீர்களேயன்றி உண்மையான துறவியல்ல. ஆகையால், தாங்கள் இந்தத் கோலத்திலேயே எப்போதும் இருக்க வேண்டு மென்ற கட்டாயமும் இல்லை. அதுவுமன்றி தங்கள் தகப்ப னாரையும் தாயாரையும் தாங்கள் ஒன்றாய்ச் சேர்த்து நல்ல நிலைமையில் வைத்துவிட்டீர்கள். அதுவும் தவிர, தங்கள் சம்சாரம் குற்றமற்ற பதிவிரதா சிரோன்மணி என்ற விஷயத்தை யும் தாங்கள் திருப்தி செய்து கொண்டீர்கள். அந்த ஒரு விஷயத்தைப் பற்றியே தாங்கள் சந்நியாசி ஆனது. அது திருப்தி கரமாக முடிந்தது. இனி தாங்கள் சந்நியாசிக் கோலத்தில் இருக்க வேண்டிய அவசியமுமில்லை. இனி அவர்களைக் காண்ப தொன்றே பாக்கி. அதுவும் திருவருளால் வெகு சீக்கிரம் கைகூடுமென்று என் மனசில் ஏதோ ஒரு தெய்வம் சொல்லுவது போல நான் உணருகிறேன். இறந்து போக வேண்டுமென்று நினைத்திருந்த தாங்கள் தங்கள் தந்தையாரைக் கண்டவுடன், இனி அவர்களைக் காப்பாற்றி சந்தோஷ நிலைமையில் வைக்க வேண்டும் என்பதைக் கருதி தாங்கள் உயிருடன் இருக்கிறீர்கள். ஆகையால் அவர்களுடைய மனம் பூர்த்தியான சந்தோஷத்தை அடையும்படி தாங்கள் எப்படியும் செய்ய வேண்டும். தாங்கள் அவர்களுடைய புத்திரர் என்பதைக் கூடிய சீக்கிரம் அவர்களுக்குத் தாங்கள் தெரிவிப்பதே உசிதமெனத் தோன்றுகிறது. அதற்குப் பூர்வாங்கமாகத் தாங்கள் இப்போது தங்களுடைய திrை காஷாயம் முதலியவைகளை நீக்குங்கள் உங்களுடைய அடையாளத்தை இவர்கள் கண்டுகொள்வது துர்லபம். கண்டு கொண்டாலும், இருவரும் ஒரே மாதிரியான தோற்றமுடையவர் களென்று தான் தாங்கள் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கிறீர் களே. அவர்கள் திடீரென்று அதிர்ச்சியடையாதபடி நாம் படிப்படியாய் உண்மையை வெளியிட்டு விடலாம்” என்றார்.

அதைக்கேட்ட திவான் சாமியார் சிறிது நேரம் தமக்குள் ஆலோசனை செய்து பார்த்து, “சரி சுவாமிகளே! தாங்கள் சொல்வதும் யுக்தமாகத்தான் தோன்றுகிறது. அப்படியே