பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 279

பொருத்தமானது. பூஞ்சோலையம்மாளது சொத்து முழுதும் பணமாக மாறி இரண்டு பங்குகளாய்ப் பிரிந்து இரண்டு புதல்வியரிடத்திலும் போய்ச் சேர்ந்தது. பூஞ்சோலையம்மாள் ஒவ்வொருவர் வீட்டிலும் ஆறு மாத காலம் இருப்பதென்றும், அந்தக் காலத்தில் அந்த அம்மாளுக்கு ராஜோபசாரம் செய்வதற்கே அந்தப் பணம் உபயோகப்படுத்துவதென்றும் ஒர் ஏற்பாட்டைப் புதல்வியர் இருவரும் நடத்தி வருகின்றனர். அந்த அம்மாளின் சந்தோஷம் அளவு கடந்து மீறிக் கொண்டே போவதால், தொந்தி தொப்பைகள் வாசற்படிகளுக்கு அபாயம் வந்துவிடுமே என்ற அச்சம் சிறிதுமின்றிப் பெருத்துக் கொண்டே போகின்றன.

குஞ்சித பாத முதலியாரும் புஷ்பாவதியும் சிற்றின்ப சுகத்தைச் சுருக்கிப் பேரின்ப சுகத்தை எதிர்பார்த்து சிவ பெருமானது பூஜை நடத்துவதிலும் அவனது சிருஷ்டி திதி சங்காரங்களைப் பற்றிய வருமங்களை ஆராய்ச்சி செய்வதிலும் தமது பொழுதைக் கழித்து வருகின்றனர். -

சுந்தரமூர்த்தி முதலியாரும் அவரது சகாக்களான துஷ்டர்களும் எவ்வேழு வருஷம் காராக்கிரக தண்டனை பெற்று மனிதராய்ப் பிறந்தும் தமது துர்நடத்தையால் மாடுகளாய் மாறி உழன்று தவிக்கின்றனர்.

கோகிலாம்பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பராங்குசம் பிள்ளை வஞ்சித்து அழைத்துப் போய் பலாத்காரம் செய்த சங்கதி எப்படியோ போலீஸ் கமிஷனருக்கு எட்டிப் போக, அவர் அந்தப் பகைமையை மனதில் வைத்து, சமயம் பார்த்து அவரை வேலையிலிருந்து தகையர் செய்துவிட்டார். அவர் சோற்றுக்குத் தாளம் போட்டு வீடு விடாய்ப் பிச்சைக்குப் போகும் காலத்திலும் ரைட் லெப்ட் என்று கம்பீரமாகவே நடந்து போகிறார்.

நமது முத்துசாமியை திவான் தமது பண்ணையின் பெரிய காரியஸ்தராக வைத்திருக்கிறார். அவரது பரோபகார குணம் வர வரக் கனிந்து பழுத்துப் போகவே, எந்த மனிதராயிருந்தாலும், அவரது துன்பத்தைக் களைந்த பிறகுதான் அவர் தமது போஜனத்தையும் கவனிப்பார். புதுச்சேரி சப் இன்ஸ்பெக்டர் அழைத்துச் சென்ற துளளியம்மாளை துரைக்கண்ணு முதலியார்