பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{》 அரவான் శి• 107 யெத் தனியா விட்டுட்டு எவ்வளவு நேரம் வெளிலே சுத்த முடியுது? உன் மாதிரியா? காலைலே போன பொம்புள்ளே, திரும்பி வர இத்தனை நேரமாச்சுதுன்னா என்னாத்தை சொல்றது!” “என்னாத்தை சொல்லப்போறே? யாராவது இஸ்துக்கிட்டு ஒடிட்டாங்கன்னு பாத்தியா?” அவன் மனம் 'சுருக்கென்றது. வயித்துக்குக் கஷ்டம் வந்துட்டுதுன்னா, கொண்டவளுக்குக்கூட இவ்வளவு எளக்காரமாப் போயிடுமா? - குழந்தை மறுபடியும் கத்த ஆரம்பித்துவிட்டது. அவன் கண்கள் ஜ்வலிக்க ஆரம்பித்தன. இண்ணைக்கு அவன் மனம் நோவடிக்கறத்திலேயே அவளுக்குச் சந்தோசமா? “ஏன் அதுக்குள்ளேயும் விலக்கிட்டே?” “சரிதான்! என் புளைப்பும் உன் புளைப்பும் அதிலேதா னிருக்குது.” “என்ன அம்மே, வந்ததே மொதக்கொண்டு ஒரு மாதிரியா யிருக்கே. புதிர் போட்டுப் பேசுறே- என்ன? உடம்புக்கு பூசைக்காப்பு போடணுமா?” அவள் குழந்தையை இடுப்பில் வைத்துக் குலுக்கிய வண்ணம் திண்ணையில் உலவியபடி, சமாதானப்படுத்த முயன்றுகொண்டே சொன்னாள். “கொஞ்சம் அவசரப்படாமெ நான் சொல்றதைக் கேளுஇன்னிக் காலையிலே இப்படீ போனேனா- இந்த ரோட் டோடே போனேன்- அப்புறம் ஒரு சந்துலே துளைஞ்சேன். ஆனால் அது சந்தில்லே. ஆள்நடமாட்டம் அதிகமாயில்லே. ரெண்டு பக்கமும் தனித்தனியா பங்களாவுங்க இருந்திச்சு. அப்புறம் அப்படித் திரும்பினேன். இப்படித் திரும்பினேன்.