பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

甘6 * லா. ச. ராமாமிருதம் பாணாக்காரன் போட்ட அதட்டல் அவன் மனசில் அசரீரி மாதிரி பாய்ந்தது. இந்த யோசனை எனக்கு ஏன் அப்பவே தோணலே! சம்பளத்தை அவ பேருக்கு எளுதி வெச்சோம்னா அவ அந்த வீட்டிலே போய் சாகவேணாம். சம்பளத்தை வாங்கி சாப்பிட்டுக்கிட்டு அவ நிம்மதியாயிருப்பா. நம்ப மவனாவது புளைப்பான். திரும்பி வந்தா பார்ப்போமில்லியா? - திரும்பி வராமெ போனா? - திரும்பி வராமெ போனாலும் நம்ப மவன் இருப்பான், இல்லியா!' அவன் மனசிலேயே ஒரு பெரும் கனம் குறைந்தது. சந்தோஷம் கூடப் பிறந்தது. அந்தப் போலீஸ்காரனை அணுகினான். “சண்டையிலே சேக்கற ஆபீஸுக்கு வளி எந்தப் பக்கம்?" 4. அவன் திரும்பிவரும் வேளைக்குள் அஸ்தமித்துவிட்டது. குழந்தையை நினைத்துக்கொண்டே அவன் ஒடோடி வந்தான். இன்றைக்கென்று அவள் அவனுக்கு முன்னாலேயே வந்திருந்தாள்; அவனை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். அவனுக்கு முகம் மலர்ந்தது. ஆனால் அவள் முகம் மாறித் திகில் பிடித்துப் போயிருந்தது. "ஐயோ, கொளந்தையைப் பாரேன்!” என்றாள் கையைப் பிசைந்துகொண்டே அவனுக்கு அடிவயிற்றில் “சுரீலென்று ஜில்லிட்டது. உள்ளே ஓடினான். அதன் காதில் ஒரு நூல் ரத்தம் வழிந்திருந்தது. வயிறு உப்பி. அதன் அருகே உட்கார்ந்தான். அவளும் குழந்தையின் அந்தண்டைப் பக்கம் உட்கார்ந்துகொண்டாள். ஆனால் அதை அவன் உணர்ந்தானேயொழிய, காணவில்லை. அவன் பார்வை குழந்தையின்மேல் நிலைகுத்திப் போயிருந்தது. “என்ன சுருக்கனா வந்துட்டே?”