பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டு மேளம் o 179 “ஏண்டி? என்னைப் பாத்தா உடுத்திக்கிறமாதிரி இல்லையா? இந்தக் கல்யாணத்துக்கில்லாமெ எப்போ உடுத்திக்கிறதாம்? சரி சரி. நான் ரெடி மேளம் நெருங்கறாப் போலயிருக்கே. ஐயர் உங்களைத் திட்டாமெ பாத்துக்கறேன். என்னைக் கீழே சேத்துடுங்கோ.” உள்ளங்கையில் ஏந்தினாற் போல்தான் அவர்கள் அவளைக் கீழே கொண்டுபோனாலும், அந்தப் பிரயாசை கூட அவளுக்குத் தாங்கவில்லை. நரம்புகள் மார்பில் சுருட்டி அடைத்தன. மூச்சு திணறிற்று. நல்ல வேளையாய்ப் பெண்கள் கூட்டமெல்லாம் வாசலில் நெரிந்திருந்தது. கூடத்து அறையில் சேர்ந்துவிட்டோம் என்று நிச்சயப்பட்டதும் ஜானாவுக்கு திடீரெனக் கண்கள் இருட்டின. “சின்னா, ஒரு முழுங்கு தீர்த்தம் கொண்டு வாயேன்!-” மேளச் சப்தம் நெருங்கிக்கொண்டே வந்தது. மேளநாதம் தூரத்திலிருந்து நெருங்கிக்கொண்டே வந்து அவளுள் பொழிந்து ஒரு பரபரப்பைப் பரப்பியது. அவள் விழுங்கியது ஜலமா, அல்லது அந்த நாதத்தின் விறுவிறுப்பா என்று நிச்சயமாய்த் தெரியவில்லை. உடல் பரபரத்தது. அந்த இன்ப வேதனை தாங்க முடியாது நாற்காலியை விட்டு எழுந்து அங்குமிங்குமாய் எங்கேனும் ஒடலாமா என்று தோன்றிற்று. ஆனால் அவளை, அவள் உடல் நாற்காலியோடுதான் அறைந்து வைத்தது. மண்டையில் போய் அந்த வேகம் அழுத்துகையில் அவளுக்குப் பட்டது. இதைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுதாரித்து சுவாதீனத்துக்குக் கொண்டுவர வேண்டுமே யொழிய, அதன்படி விட்டால் அதோ கதிதான். இந்தப் போராட்டத்தில் வாசலில் பச்சை சுற்றலும் ஊஞ்சலும் எப்பொழுது முடிந்தன என்று தெரியவில்லை. கல்யாணப் பெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டு அவளுடைய ராமதுரை கம்பீரமாய்க் கூடத்துள் நுழைவதைக்