சொக்காய் கிடையாது. திறந்த மார்பில்,கழுத்தில் காரடையா நோன்புச் சரடு மாதிரி ஒரு மாங்கல்யக் கயிறு. அவ்வளவுதான்.
- "அது கேலியாக் கேட்டதோ, வேணுமென்றுதான்
கேட்டதோ,தெரியாது. ஆனால்கேட்கும்போதெல்லாம், என் எலும்பு ஒவ்வொன்றும் தனித்தனியாய் உருகிற்றுடி! நானே கரைந்து போய்விடுவேன் போலிருந்தது. என் கனவிற்குத் தகுந்தாற்போல் இன்றைக்கு ஸ்நானம் பண்ணப்போன இடத்திலே, இது அநாதையா-”
- “சரிதான்! தாத்தான்னு முறை வெச்சு உங்க கனாக்
குழந்தை கூப்பிட்டத்துக்கோசரம் எனக்கு ஒரு பேத்தி யைக் குளத்திலேருந்து பொறுக்கிப் பாத்து எடுத்துண்டு வந்தேளாக்கும்! எந்த வில்லிச்சி பெத்துப் போட்டுட்டுப் போனாளோ- போலீஸுலே-”
- குழந்தை கத்த ஆரம்பித்துவிட்டது.
- "ஐயோ, பசிடீ-” அதன் பசியழுகையைப் பார்க்கையில்,
அந்த அம்மாளின் முகம் உள் போராட்டத்தில் முறுகிச் சவுங்கியது. அவளையும் மீறிக் கைகள் குழந்தையை வாங்கிக் கொண்டன. அன்னையின் வாயும் கைகளும் பாலிடத்தை ஆத்திரத்துடன் தேடித் தவித்தன. அந்த அவஸ்தையைக் கண்டு ஐயர் தலை குனிந்தது.
- “நைவேத்தியப் பாலைப் புகட்டு; வேறே வாங்கி
வருகிறேன்-” கீழ்நோக்கிய அவர் வார்த்தைகள் பூமியில் தெறித்து எழும்பின.
- அம்மாள் ஆத்திரத்துடன் கீழே உட்கார்ந்து, குழந்தையை
மடியில் படக்கென்று கிடத்திக் கொண்டாள். வார்த்தைகள் வாயினின்று வெடித்து உதிர்ந்தன.
- “இப்போ திருப்தியாயிடுத்தோன்னோ? மூணுபேரை
ஏற்கெனவே முழுங்கினேள். ஒருத்தியை வயசு வரத்துக்கு