பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 8 శి? ● லா. ச. ராமாமிருதம் கடைசியில் விடுதலையானாள். உடம்பு தேவலையாயிற்று என்றல்ல; அவளால் இனி ஆபத்தில்லை. இம்சை பண்ணாத பைத்தியமென்று. அவளுக்குச் சாப்பாட்டுக்கும் குறைவில்லை. ஏனெனில் அவளுக்குப் பிகூைடியிட்ட வீடுகள் அனைத்தும் திடீரெனச் செழித்தன. அவள் கைநீட்டி வேண்டுமென்று கேட்டோ, அல்லது தானாகவோ ஏதாவது சாமானைப் பெற்ற கடைகளுக்கு அன்றைய வியாபாரம் வெகு மும்முரமாய் நடக்கும். ஆகையால் அவளுக்கு அன்னமிடவும், கேட்டதையும் கேளாததையும் கொடுக்கவும் 'நான் நான் என்று ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டனர். அவள் கையால் ஒருமுறை உடலைத் தடவினால் போதும் தீராத நோய்கள், அவ்வுடலி லிருந்து பொட்டென உதிர்ந்து போகும். இருந்தாலும் பைத்தியம்-! இப்படியே ஜனனி வெகுகாலம் தொண்டு கிழமாக ஜீவித்திருந்தாள். உடல் சுருங்கி, பல்லுதிர்ந்து தலை மயிர் வெண்பட்டாய் மின்ன. அப்புறம் ஒருநாள் ஒரு மரத்தடியில் அவள் மத்தியான்ன வேளையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். மத்தியான்னம் பிற்பகலாயிற்று. பிற்பகல் மாலையாயிற்று. மாலை இரவாயிற்று. இரவு காலையாயிற்று. காலை பகலாயிற்று. அவள் மூக்கிலும் வாயிலும் எறும்பும் ஈயும் தாராளமாய்ப் புகுந்து புறப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனால் அவள் எழுந்திருக்கவே இல்லை. C}