பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 * லா. ச. ராமாமிருதம் பண்ணின தவறுக்கு தண்டனையடைஞ்சப்புறம் அத்தோடு அது போச்சு. அப்புறம் மேல் காரியத்தை ஒட்டணும். நீ மாத்திரம் இந்தத் திருட்டு புத்தியையெல்லாம் விட்டுட்டுத் திருந்தறதாயிருந்தால், உன்னை நான் 'கல்லாப் பெட்டியில் உட்கார்த்தி வைப்பேன்- என் பெண்ணைக்கூடக் கொடுப்பேன்- போ, போ- சொக்காயையும் வேஷ்டியையும் மாத்திண்டு கோகர்ணத்தை எடு-” “அவன் எப்பொழுதும் இப்படிப் பேசியதேயில்லை. நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அவசர அவசரமாய் அங்கு விட்டுப் போனேன். “எனக்கு சமைக்க சரியாய்த் தெரியாவிட்டாலும், பரிமாற என் எஜமான் என்னை நன்றாய்ப் பழக்கியிருந்தான். ஏனெனில், நான் உருவாயிருப்பதாலும், சரியாய் உடுத்துவ தாலும், பந்திக்கு எடுப்பாய் இருப்பேன். ஆகையால் அவன் பேருக்கும் எடுப்பாயிருந்தது. முக்கியமான சாமான்களைத் தூக்குவதற்கு நான்தான் முதலில் போயாக வேண்டும். மற்றவர்கள் இதைப்பற்றி அவனிடத்தில் அலுத்துக்கொண்டால், 'அதெல்லாம் உங்களுக்குத் தெரியாது; வியாபார சூட்சுமம். சரக்கு பாதி ஆள் பாதி- இது ரெண்டும் சேர்ந்தால்தான் முக்கியமாய் இந்தச் சமையல் தொழிலுக்கு ரஞ்சகம். இல்லாவிட்டால் இவன் சமையல் லட்சணத்துக்கும் கை வாசனைக்குமா இவனைக் கட்டிண்டு அழறேன்? என்பான். “ஆகவே நான் சாம்பார் எடுத்தேன், கூட்டெடுத்தேன், கறி எடுத்தேன், ரஸம் எடுத்தேன்.” "பந்தியில் அவளும் உட்கார்ந்திருந்தாள். அவள் இலைக்கு நான் வரும்போதெல்லாம் என்னைக் குறும்பாகப் பார்த்துக் கொண்டே சிரித்துக்கொண்டிருப்பாள். எனக்கு எரிச்சலா யிருந்தது. இரு இரு மகளே- என்று கருவிக்கொண்டே பாதாம்கீரை எடுத்தேன்.