2
வட ஆற்காடு ஜில்லா
இந்த ஜில்லாவில் 2,397-கிராமங்கள் இருப்பதுடன் 20,55,594 ஜனங்க ளிருந்து வருகிறார்கள்.
பெரும்பாலும் இது மலைப் பிராந்தியங்களுள்ள ஜில்லாவே. இதில் அனேக அழகிய காட்சிகளும் உண்டு. மேற்கு வடக்கு பாகங்கள் குன்றடர்ந்த அழகிய பிராந்தியங்கள். கிழற்குத் தெற்கு பாகங்களோ கட்டையாயும் அழகின்றியும் இருக்கக் காணலாம். பூமி ஸார முள்ளது. நன்கு பயிர் செய்யப்பட்டும் வருகிறது. பெரும்பாகம் வெறும் குன்றுகளடர்ந்திருப்பினும், இயற்கை யமைப்புப் பள்ளத் தாக்குகள் அனேக விடங்களில் அணைகள் கட்டி ஜலத்தைத் தேங்கச் செய்து ஏரி குளங்கள் உண்டுபண்ணிக் கொள்ள அனுகூல முள்ளதாக ஏற்பட்டிருக்கிறது. குன்றுகளில் பொழியும் மழை விழுந்த விடங்களில் பூமியில் சுவறிப் போகாமல் அருவிகளாக ஓடி ஏரி, குளங்களில் விழுந்து அவைகளை நிரப்புகின்றது. ஆதலால் இந்த ஜில்லாவின் சமவெளிப் பிராந்தியங்கள் நீர் வளம் பொருந்தியவை. சென்னை ராஜதானி ஜில்லாக்களுள் ஏரிகள் அதிகம் வாய்ந்துள்ள ஜில்லாக்களுள் ஒன்று வட ஆற்காடு ஜில்லா இந்த ஜலத் தேக்கங்கள் ஏரிகளென்றும் சில விடங்களில் குளங்கள் என்றும் கூறப்படுகின்றன. காவேரிப்பாக்கம், மாமண்டூர் இவ்விடங்களிலுள்ள ஏரிகளில் எப்பொழுதும் ஜலம் இருந்து கொண்டே யிருக்கும். விஸ்தீரணத்தில் அவைகள் ஏழெட்டுச் சதுர மைலுள்ளவை.
கர்நாடக நவாப்புக்கள் அதிகாரம் நடத்திய ஊர் இப்பொழுது ஆற்காடு என் றழைக்கப்பட்டு வருகிறது