பக்கம்:ஜெயில்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெயில் சமூகம் ஒரு முறை சட்டங்கள் இயற்றிவிட்டால், பிறகு அடிக்கடி அ ைவ க ளே மாற்ற இசையாது. நாளடைவில் சட்டங்கள், மாற்றவும் உடைக்கவும் முடியாதபடி, இறுகிப் போய்விடும். சட்டங்களை அமுல் கடத்துபவர்களே அவைகளை மாற்ற விடாமல் குறுக்கே கின்று வெற்றிகரமாகத் தடுத்துவிடுவார்கள். ஏன் ? அது அவர்கள் சுபாவம். எந்த வலிமையைக் கொண்டு தடுப்பார்கள்? அங் த ச் சட்டங்களின் பலத்தைக் கொண்டே கடுப்பார்கள். அப்படியால்ை, சமூகம் அாங்கிக்கொண்டிருக்குமா? ஆம், சமூகம் ஒருவகைத் அாக்கத்தில் ஆழ்ந்திருக்கும். அதை எழுப்புவது, மலே போன்று படுத்திருக்கும் மலைப்பாம்பை எழுப்புவது போல், கடினமான விஷயங்தான். சாதாரண அனற் பொறிகளாகிய கிளர்ச்சிகளால் பல சமயங்களில் அதை எழுப்பிவிடலாம்; சில சமயங்களில் புரட்சியான பெருங் தியாலேயே சமூகத்தை விழிக்கச் செய்ய முடியும். உடனே காலத்திற்கு ஏற்ற புதுச் சட்டங்கள் பிறக்கும். முன்னேற்றம் உண்டாகும். சமூகத்தில் மீண்டும் அமைதி நிலவும். ஜெயில் நிர்வாகத்தைப் பற்றி அடிக்கடி அனம் பொறிகள் பறப்பதுண்டு. ஒவ்வொரு தேசத்திலும் சில அறிஞர்கள், ஜெயில் நிர்வாகத்தின் ஊழல்களைப் பேச்சா லும் எழுத்தாலும் வெளிப்படுத்தி, பெரிய சீர்திருத்தங் களுக்கு அடிகோலி யிருக்கிருர்கள். அவர்களால் அநேக நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆயினும், இந்த நன்மைகள் கடலில் கரைத்த காயத்தைப் போன்றவை தான். பெற்ற நன்மைகள் ஒரு கை மண்ணளவு; பெற 9 --- 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/15&oldid=855421" இலிருந்து மீள்விக்கப்பட்டது