பக்கம்:ஜெயில்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் அநேக ஜெயில்களில் அநுபவம் பெற்றவர்களா யிருப் பார்கள். வாழ்க்கையில் நெடுங்காலத்தை அவர்கள் ஜெயிலில் கழிக்க சேர்வதால், நாளடைவில் அவர்கள் காவலாளர்களாகிய வார்டர்களுக்கு உதவி ஆட்களாக வைக்கப்படுவார்கள். அவர் க ளு க்கு ஜெயிலிலுள்ள ஒவ்வொரு பொங் தும் புடையும் தெரியும் ; பல வருஷங்க 6ҮГ /Ге55 வந்து போகும் . ஜெயில் அதிகாரிகளுடைய நடத்தையும் மனப்போக்குகளும் தெரியும்; அதிகாரிகள் கண்கள் திறந்திருக்கும்போதே கண்கட்டி வித்தைகள் செய்யவும் தெரியும். இவ்வாறெல்லாம் இருப்பதைப் பார்த்தால், இந்த முக்களை யெல்லாம் அடைத்து வைத்திருப்பது சரிதான் என்று தோன்றும். ஜனங்கள் அப்படித்தான் எண்ணு கிருர்கள். ஆனல் உண்மை அப்படியில்லை. கைதிகள் நிறைந்த ஒரு ஜெயிலுக்குள் ஒரு சிறு குழந்தையை அனுப்பிப் பாருங்கள். உடனே நூற்றுக் கணக்கான கைதிகள் ஓடி வந்து அதைத் தாக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுவார்கள். நோய்வாய்ப்பட்ட கைதிகளுக்கு மற்றக் கைதிகள் உதவி செய்வது வழக்கமா யிருக்கிறது. கைதிகளும் நம்மைப் போன்ற மனிதர்களே என்பது கேரில் ஒரு முறை பார்த்தாலும் விளங்கும். அவர்கள் ஜெயிலில் அதிகம் கெட்டுப் போகக்கூடிய சந்தர்ப்பங்களை நாமே அமைத்திருக்கிருேம். தண்டனை பெற்றதிலிருந்து அவர்களுடைய மனச்சாட்சி மழுங்க ஆரம்பிக்கிறது. வெளியிலுள்ளோரிடம் வெறுப்பும் துவேஷமும் கொள்ளு கிருர்கள். *H 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/19&oldid=855429" இலிருந்து மீள்விக்கப்பட்டது