பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 யும் வடமொழி அறிவும் சைவ சித்தாந்த நூல் உணர்ச்சி யும் தமிழ் உலகத்திற்குப் பல்லாண்டுகளாகப் பயன்பட்டு வந்தன. சொற்பொழிவாற்றும் திறமையும் மாணவர்களுக் குத் தெளிவு பெறப் பாடம் சொல்லும் வன்மையும் நன்கு வாய்க்கப் பெற்றவர்கள். அரிய பொருள் எனினும் பேசு வோரது சோர்வினால் சிறப்புறுவதில்லை என்பதும் பேசு வோரது சொல்வன்மையால் எளிய பொருளும் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் என்பதும் நம் அனுபவத்திற் கண் டனவாம். சிறிய பொருளையும் மிக விரிவாக எழுதுதற்கும் பேசுதற்கும் ஆங்கில மொழி தகுதி உடையதென்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். திரு. ஞானியாரடிகளாருடைய சொற்பொழிவைச் கேட்டபின், அத்தகுதி மொழிக்கு உரியதன்று என்பதும் பேசுவோரைப் பற்றியது என்பதும் அறிந்து கொள்ளலா னேன். அடிகள் ஒரு பொருளைப் பற்றி விரிவுரை நிகழ்த்துங் கால், அது மிகக் குறுகிய கால எல்லையில் முடிக்கத்தக்க தாயினும் அதனைத் தம் மதி வன்மையால் பலவாறு - வகுத்து வகுத்துக் கேட்பவர் மனம் சலியா வண்ணம் மிக நீண்ட நேரம் விளக்கிப் பேசுவார்கள். இவ்வியல்பு அடி களுக்கே சிறந்ததொன்றாக அமைந்திருந்தது. வரலாற்று. பகுதிகளை எடுத்து விளக்குங்கால் அவற்றில் அமைந்துள்ள அறநிலை, நீதி, உலகியல் முதலியவற்றை மிகத் தெளிவா எடுத்துக் கூறுவார்கள். எத் திறத்து மக்களையும் தம் உரை வன்மையால் பிணித்துத் தம்வயப்படுத்தும் ஆற்றல் அடிகளிடத்து மிக்கிருந்தது. அரிய சொற்பொழிவாயினும் கால நீட்டிப்பில் கேட்பவர் சோர்வடைதல் இயல்பு. இ6 வியல்பு, அடிகளுடைய சொற்பொழிவைக் கேட்பவர்பாக காண்டல் அரிதாகும். சமய நிலையில் அடிகள் வீர சை6 ராயினும், சித்தாந்த சைவம் முதலியவற்றில் கேட்பவ