இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிப்பெருங்கோ முடியரசன்
45
ஒன்றா இரண்டா ?
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல - அய்யா
- ஒன்றா
வெயிலா மழையா நடந்து செல்வார் - நாம்
- ஒன்றா
சென்றால் இருந்தால் நம் நினைவு - கண்
- ஒன்றா
நினைவும் கனவும் எவர்க்காக - போர்
- ஒன்றா
நின்குலம் தழைத்திடத் தமிழ்மகனே - நீ
நிலைத்திடத் துடித்தெழு! நின்கடனே
உயிரும் உடலும் நிலைத்தவையோ? - என்றும்
உழைப்பாய் நின்னினம் உயர்ந்திடவே
25-6-79
எப்படிப் பெரியார் வாழ்வார் ?
பெரியார் எப்படி வாழ்வார் - நம்
- பெரியார்
சரியா தவறா சடங்குகள் என்றே
- பெரியார்
சாதியும் மதமும் சரிப்பட வில்லை
சமுதா யந்தான் உருப்பட வில்லை
மோதிய பகையோ சாய்ந்திட வில்லை
- பெரியார்
சிந்தனை செய்கெனச் செப்பினர் அன்றோ?
சிறிதும் நும்செவி புகுந்ததும் உண்டோ?
மந்தைகள் போலினும் வாழ்வது நன்றோ?
- பெரியார்
6-12-1982