78
ஞாயிறும் திங்களும்
அடக்கத்தை அடக்கம் செய்தோம்
படைவலியால் வடபுலத்தைச் சேர வேந்தன்
பகையாக்கிப் பணிவித்தான் நீயோ பேச்சு நடைவலியால் நட்பாக்கிப் பணிய வைத்தாய்!
நாவலனே மன்பதையைக் காக்கும் கொற்றக் குடையுடைய குடிப்பிறத்தல் துன்பம் என்று
குட்டுவனும் தெளிந்துரைத்தான் புலவர் பாட்டுத் தொடையுடையாய் முதலமைச்சன் எனினும் நானோர்
சூழ்நிலையின் கைதிஎன நீயும் சொன்னாய்.
அன்றுமுதல் இன்றுவரை தோழர் என்னை
அண்ணாவென் றழைக்கின்றார், அமைச்ச ரான இன்றென்னை ஒருசிலரும் அண்ணா என்பார்
இரண்டுக்கும் இடையிலுள வேறு பாட்டை நன்றுணர்வேன் என்றுரைத்தாய் அமைச்ச ராகி
நாடாளும் பொறுப்பேற்றேன் இன்றும் தோழன் அன்றுதரும் நிலைபோல வெண்பொன் ஒன்றே
அளிக்கின்றான் மதிக்கின்றேன் மகிழ்வுங் கொள்வேன்.
நாடாள வந்தபினர் நூறு நூறு
நான்தருவேன் நான்தருவேன் என்று செல்வர் ஒடோடி வருகின்றார், ஏழை தந்த
ஒருவெண்பொன் என்னுடலிற் குருதி யாகும் மேடாளும் செல்வர்தரும் வெண்பொன் நூறும்
மெய்ப்பூகம் சந்தனமாக் கொள்வேன் என்றாய் ஊடாடும் பொருள்நயத்தை எளியோர் தம்பால்
உனக்கிருக்கும் அன்புளத்தைக் காட்டி நின்றாய்.