பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

79



பிறந்தனைநீ சென்னைஎனும் இராச்சி யத்தில் பெற்றெடுத்த தாய்நாட்டின் இழிவு நீக்கி இறந்தனைநீ தமிழ்நாட்டில் , தமிழ்நா டாக்க ஏற்றதுயர் பற்பலவாம், தன்ன லத்தைத் துறந்தனைநீ நாட்டுநலம் ஒன்றே வேண்டித் துயபணி ஏற்றனைநீ உழைத்து ழைத்துச் சிறந்தனைநீ அன்புருவே காந்தி யண்ணல் சிந்தையெலாம் நின்செயலில் மிளிரக் கண்டோம். புகழ்மலையின் உச்சிக்கே சென்று விட்டாய்? புவியாளும் முதலமைச்சும் பெற்று விட்டாய்! மகிழ்வுற்றுச் செருக்குற்றுத் திரிந்தா யல்லை மன்னவனே சாமான்யன் என்றே உன்னை இகழ்வாக அடக்கமுடன் சொல்லி வந்தாய்! இனியிந்த அடக்கத்தை எங்குக் காண்போம்? தகவுடையாய் அடக்கத்தை அடக்கம் செய்தோம் தனியாத துயர்க்கடலில் மூழ்கி விட்டோம் 16–2-1969