பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

81



| பண்பு மலர் | பரந்திருக்கும் உள்ளத்தை நெற்றி காட்டும் ; பண்பாட்டை நகைதவழும் இதழ்கள் காட்டும் ; சிறந்திருக்கும் கூர்மதியை மூக்கு காட்டும் ; சிந்தனையின் ஆற்றலினை விழிகள் காட்டும்; கரந்திருக்கும் விரத்தைப் புருவங் காட்டும் ; கரகரத்த குரல்காட்டும் பெருமி தத்தை ; சுரந்திருக்கும் பேரருளை உள்ளங் காட்டும் சுட்டுவிரல் தமிழரின ஒருமை காட்டும். எளிமைதனை அணிந்திருக்கும் உடைகள் காட்டும் ; ஏற்றத்தை அவர்கண்ட நடைகள் காட்டும் ; ஒளிமிகுந்த அறிவாளர் எடுத்து ணர்த்தும் உயர்நெறிகள் போற்றுவதைச் செவிகள் காட்டும் ; தெளிவுடைய மனமுடையார் அண்ணா என்று செப்புகிற உறவுச்சொல் உரிமை காட்டும் ; அளிமிகுந்த துணிவுதனைச் செயல்கள் காட்டும் ; அடக்கத்தைக் குறளான உருவங் காட்டும் ; பொறுமைஎனும் உயர்பண்பு கொண்ட வுள்ளம் பொறாமைதனை எள்ளளவும் காணா வுள்ளம் வறுமையினைக் காணுங்கால் இரங்கும் உள்ளம் வளர்தமிழின் வாழ்வுக்கே வாழ்ந்த வுள்ளம் சிறுமையினைக் காணுங்கால் சிறும் உள்ளம் சினமென்னுஞ் சுடுநெருப்பைச் சேரா வுள்ளம் வருபவரைக் கைகொடுத்து வளர்க்கும் உள்ளம் வாழ்வெல்லாம் நலஞ்செய்தே வளர்ந்த வுள்ளம். கலைத்துறையில் திறமிக்க தலைவ ருண்டு களங்காணாப் போராட்டத் தலைவ ருண்டு கலைத்துவிடும் அரசியலில் தந்தி ரங்கள் காட்டுகிற தலைவருண்டு துறைகள் தோறும்